கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, December 28, 2010

கவர்னர் உரை தயாரிப்பில் கலைஞர் தீவிர ஆலோசனை


முதலமைச்சர் கருணாநிதி நேற்று (27.12.2010) இரவு 8 மணிக்கு திடீரென கோட்டைக்கு வந்தார். அதிகாரிகளுடன் அவர் கவர்னர் உரை தயாரிப்பு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினார்.

2011-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி மாதம் 7-ந் தேதி நடக்கிறது. அன்று தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றுகிறார். இதற்காக கவர்னர் உரை தயாரிப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (27.12.2010) இரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி திடீரென கோட்டைக்கு வந்தார். நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக கோட்டைக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டது.


அவர்கள் வந்ததும் அவர்களுடன் முதல்-அமைச்சர் கருணாநிதி, சட்டசபையில் ஜனவரி 7-ந் தேதி கவர்னர் ஆற்றக்கூடிய உரை தயாரிப்பு பணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

உயரதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதம் நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

அதன்பின்னர் முதலமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

No comments:

Post a Comment