கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 18, 2010

2011 ஆம் ஆண்டு டிசம்பர் வரை குடும்ப அட்டைகள் செல்லும் - தமிழக அரசு அறிவிப்பு


தமிழ்நாட்டில் ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. சமீபத்தில் நடந்த சோதனையின் போது 20 லட்சம் போலி குடும்ப அட்டை கள் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைகளில், இணைக்கப்பட்டுள்ள தாள்கள் இந்த மாதத் துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைகளே தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இப்போது பொது மக்களிடம் இருக்கும் குடும்ப அட்டைகள் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை செல்லு படியாகும். அட்டை களில் உள்ள தாள்கள் தீர்ந்து விட்டால் கூடுத லாக சேர்த்துக் கொள் வதற்குரிய தாள்கள் அச் சிட்டு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஏற்கனவே ஓராண்டு செல்லத்தக்க வகையில் நீட்டித்தோம். கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் காரணமாக, தற்போது ரேஷன் கார்டுகளை இன்னும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளோம். அதற்காக, அந்த ரேஷன் கார்டுகளின் பின்பக்கத்தில் கூடுதல் தாள்கள் இணைக்கப்பட உள்ளன. இப்பணிகள் 20.12.2010 அன்று முதல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் அனைத்து கார்டுகளிலும் தாள்கள் இணைக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் ரேஷன் கார்டை கொடுத்து கூடுதல் தாள்களை இணைத்துக் கொள்ளலாம்” என்றார்

No comments:

Post a Comment