கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, December 11, 2010

நான் குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன் - ஆ.இராசா பேட்டி


ஸ்பெக்ட்ரம் தொடர் பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா வீட்டில் சி.பி.அய். சோதனை நடத்தியது. இந்த நிலை யில் ஆ.இராசா நேற்று (10.12.2010) இரவு டில்லியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவ ரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப் போது அவர் கூறியதா வது:-


சி.பி.அய். நடத்திய சோதனை ஓர் ஆய்வு போன்றது. அவர்கள் தங்கள் நடைமுறையை செய்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொள்கி றேன். சி.பி.அய்.-க்கு நான் முழுமையான ஒத்து ழைப்பு கொடுப்பேன். சி.பி.அய். சோதனையில் முக்கியம் எதுவும் இல்லை. எந்த நடைமுறையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். சி.பி.
அய்.-க்கு ஏதும் தேவை என்றால் அதற்கும் ஒத் துழைக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். இதில் இவ் வளவுதான் நான் சொல்ல முடியும்.

இவ்வாறு ஆ.இராசா கூறினார்.

No comments:

Post a Comment