கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவை குறை கூறுவது அர்த்தமற்றது! - எக்னாமிக் டைம்ஸ் ஏடு படப்பிடிப்பு


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கண்மூடித் தனமாக முன்னாள் அமைச்சர் இராசா மீது குற்றம் சாற்ற வேண் டாம் என்று எக்க னாமிக் டைம்ஸ் பத்தி ரிகை செய்தி வெளியிட் டுள்ளது.

அந்தக் கட்டுரையில் மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற் றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச் சரைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் சார்ந்த விவகாரத்தில் அத்துறை சார்ந்த செய லாளரின் ஆலோசனைப் படி செயல்பட்ட அமைச் சரைக் குற்றம் சாற்று வதில் அர்த்த மில்லை என்றும் தெரி விக்கப் பட்டுள்ளது.

சி.பிஅய். மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முடியாமல், தீர்ப்பும் வராத நிலை யில் அவசரப்பட்டு முன்னாள் அமைச்சர் ராசா மீது குற்றம் கூறு வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஏல விவகாரத்தில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப் பாட்டு ஆணையத்தி லேயே மாறுபட்ட கருத்து நிலவியது. பா.ஜ.க. ஆட்சியில் ஆணையத் தலைவர் பிரதீப் பைஜால் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை எதிர்த்தார் என்றும், அவருக்குப் பின் வந்த நிரிபென்த்ரா மிஷ்ரா ஏலத்தை ஆதரித்தார் என்றும் அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2ஜி அலைவரிசை ஒதுக் கீட்டில் அரசுக்கு 44 ஆயிரம் பவுண்டு வரு வாய் கிடைத்த நிலை யில், 3ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் 220 கோடி பவுண்டு கிடைத்த போது, யாரும் இது குறித்து விமர்சனம் செய்யவில்லை என்றும் கட்டுரையாளர் தெரிவித் துள்ளார்.

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி உத் தேசமாக வெளியிட்ட தொகையை அதன் உண் மைத் தன்மையை ஆரா யாமல் ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்பட்ட நாடு என்ற வகையில் கண்மூடித்தன மாக குற்றம் சாற்றாமல், இப்பிரச்சினையை அணுக வேண்டும் என் றும் எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கபில் சிபல் கண்டனம்

இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, நாடாளு மன்றக்கூட்டுக்குழு விசாரணை கோரும் எதிர்க் கட்சிகளின் நட வடிக்கை நியாய மற்றது என மத் திய மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சி னையை எழுப்பி நாடா ளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் முடக்கி வரு வது குறித்து கபில் சிபல் டில்லியில் அளித்துள்ள ஒரு பேட்டியில், எதிர்க் கட்சிகளின் கோரிக்கை முற்றிலும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். விசாரணைகள் வெளிப் படையாக நடைபெறு வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத் தில் ஊக அடிப்படை யில் இழப்பைக் கணக் கிடக் கூடாது என்றார். 2ஜி ஒதுக்கீட்டையும், 3ஜிக்கு ஏலத்தில் கிடைத்த தொகையை யும் ஒப்பிட்டுப் பார்ப் பது சரியாகாது என் றும் அவர் கூறினார். அரசின் செயல்பாடு களை முடக்கவே, எதிர்க் கட்சிகள் தொடர்ந்து கூட்டுக் குழு அமைக்க வலியு றுத்துவதாகவும், கபில் சிபல் குற்றம் சாற்றினார்.

ஊழல் பற்றி பேச ஜெ.வுக்கு அருகதையில்லை!

புதுவையில் செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் வி.நாராயணசாமியும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருவதன் மூலம் அரசுக்கு இது வரை 78 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ஊழல் பற்றிப் பேச, பா.ஜ.க.வுக்கோ, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலி தாவுக்கோ அருகதை இல்லை என்றும் நாரா யணசாமி தெரிவித்தார்.

நன்றி: முரசொலி

No comments:

Post a Comment