கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை : திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை


நாடு முழுவதும் எழுந்த எழுச்சியின் காரணமாக ஸ்டாலினை மட்டும் விடுதலை செய்து இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி 31.07.2011 அன்று எழுதியுள்ள கேள்வி&பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா அளித்த பேட்டியில், பழி வாங்கும் நோக்கத்தோடு யாரையும் கைது செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
ஜெ.அன்பழகனை அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்தவர் யார் தெரியுமா? 2009ம் ஆண்டு ஆகஸ்டில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் ஸீ250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தவர். ஒரு மாவட்ட செயலாளரை, எம்எல்ஏவை காவல் துறை அதிகாலையில் கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது பழிவாங்கும் செயல் அல்லவா? படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது அவர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் சென்றபோது யாரோ ஒருவர் புகார் செய்திருக்கிறார் என்று கைது. அந்தப் புகார் பற்றி விசாரிக்கப்பட்டதா?
அதைப் போலவே திருவாரூரில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவன் ஒருவன் இறந்ததையொட்டி, அந்த விபத்து ஏற்படவே திமுக மாவட்டச் செயலாளர்தான் காரணம் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்து அதற்காக அவர் கழகப் பிரச்சாரத்திற்காக திமுக பொருளாளரோடு பயணம் செய்த நேரத்தில் கைது செய்வது முறைதானா?
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் சொல்லி யிருக்கிறாரே?
ஓ! இதன் விளைவுதான் �தா.பாண்டியனைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 கிளைகள் கலைப்பு�, �1000 பேர் விலகினர்� என்ற செய்தியா?
ஆளுங்கட்சிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதில் தமிழ் ஏடுகள் சிலவற்றுக்கு மத்தியில் பெரிய போட்டி நிலவுகிறதே?
ஆட்சிக்கு ஒரு கட்சி வந்தவுடன், அதனை ஆதரிக்க இப்படிப்பட்ட போட்டிகள் இருக்கத்தான் செய்யும்.
ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் பதிலளிக்க வேண்டுமென்று ஜெயலலிதா பேட்டியில் கேட்டிருக்கிறாரே?
பொதுத் தேர்தலுக்கு முன்பு இதே ஜெயலலிதா, ஆ.ராசா மீது காங்கிரஸ் தலைவரும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும், அப்படி செய்தால் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அரசுக்கு அளிக்கும் என்று இதே ஜெயலலிதா சொன்னார். அவரேதான் தற்போது பிரதமரும், சோனியா காந்தியும் ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதாவின் உறவுக்காக தவமிருந்து வாய்க்கு வந்தவாறு இப்போதும் உளறிக் கொண்டிருக்கின்ற ஒரு சில காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
மு.க.ஸ்டாலினை கைதே செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டியில் �மு.க. ஸ்டாலின் தரப்பு சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களைப் பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம்� என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் எழுந்த எழுச்சி காரணமாக விடுவித்ததுதான் உண்மை. ஆனால் அதை மறைப்பதற்காக மு.க.ஸ்டாலின் கைது தேவையில்லை, விடுவித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டு, ஸ்டாலின் கைதே ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.
வன்முறை, ஆபாச திரைப் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறதே?
திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் மட்டும் வரி விலக்கு தரப்படமாட்டாது. வன்முறை ஆபாச திரைப்படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று அறிவித்திருப்பது தங்களுக்கு வேண்டாத தங்களிடம் அடி பணியாதவர்களின் திரைப்படங்களுக்கு வரி விலக்கு கிடையாது என்று மறுக்க இதனை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

பொய் வழக்கை கண்டித்து திருவாரூரில் 6ம் தேதி கருணாநிதி பேசுகிறார் :

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் மீது அதிமுக அரசு தொடர்ந்துள்ள இட்டுக்கட்டிய பொய்யான வழக்கைக் கண்டித்து, திருவாரூரில் 6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், திமுகவினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு, போலீசார் கைது செய்து வருகின்றனர். இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 30.07.2011 அன்று சென்றார். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
கொரடாச்சேரி அருகே கிளரியம் கிராமத்தில், பஸ் விபத்தில் பலியான பள்ளி மாணவன் விஜய் வீட்டுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், மாணவனின் தந்தை சேகருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலினுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த பூண்டி கலைவாணனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். �உரிய ஆவணங்கள் இன்றி கைது செய்ய விடமாட்டோம்� எனக்கூறிய மு.க.ஸ்டாலின், நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, உடனடியாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பூண்டி கலைவாணன் தவிர மற்ற அனைவரையும், மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து, திமுக தலைமைக் கழகம் 31.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், “திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது அதிமுக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, இட்டுக்கட்டிய பொய்யான கொலை வழக்கு. இதைக் கண்டித்து 6ம் தேதி திருவாரூரில் கண்டன கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment