கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக பொய் பிரசாரம் - திமுக தலைவர் கருணாநிதி


இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக பொய் பிர சாரம் நடக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 30.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கச் செய்து, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய உலகத் தமிழர்களின் தலைவர் அம்மா பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்” & இப்படி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் போற்றி போற்றி விளம்பரங்கள் போலிப்புகழ் பாடும் விளம்பரங்கள்.
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரைப் பக்கத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். “நன்றி நன்றி நன்றி... இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க அயராது முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்ட அரசியல் சாணக்கியமே... உலகம் வாழ்த்தும் அருந்தவமே...” என்று விளம்பர வாசகங்கள் உள்ளன.
அடுத்து ஒரு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அவரும் அரை பக்கத்தில் ஒரு விளம்பரம். அதிலேயும் அதே நன்றி நன்றி நன்றி இத்தியாதி, இத்தியாதி...
எதற்காக இந்த நன்றிகள்? அமெரிக்கா, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறதா? அமைச்சர்களே விளம்பரம் கொடுத்திருக்கிறார்களே இல்லாமலா கொடுப்பார்கள்? எல்லோருக்கும் சந்தேகம்
இந்தச் செய்திக்குக் காரணமான பிரகாஷ் எம். ஸ்வாமி தான் தற்போது இலங்கை அரசை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா துணிச்சலும் அந்த மனதிடமும் ஹிலாரியைக் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா மட்டும்தான் பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாரா?
இதற்கு முன்பு இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானங்களே நிறைவேற்றப்படவில்லையா? வேறு சிலர் பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் அமெரிக்கா இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாகவே சொல்லுகிறார்கள், பாராட்டு தெரிவிக்கிறார்கள். எவ்வளவு பெரிய பொய்யைத் திட்டமிட்டு இங்கேயுள்ள சிலர் உண்மையாக்கி ஊராரை மயக்குவதற்கு எவ்வளவு பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு திருமாவளவன் கூட அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது உண்மையாக இருக்கலாமோ என்றெண்ணி வரவேற்றிருக்கிறார். அதைப் பார்த்தவுடன் இந்தியாவில் வாழ்கிற இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினார்கள்.
அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுத் துறைக்கான குழு, இலங்கை அரசுக்கு அமெரிக்க உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக வாக்களித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது. 2012 அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந் துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இந்தியச் சுற்றுப்பயணத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, மாநில அரசிடம் விவாதிக்க மாட்டார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிலாரியின் இந்தியச் சுற்றுப்பயணம் மற்றும் அவரது பேச்சுகள் வெளிவந்தன. அதில் அண்ணா நூற்றாண்டு நூலகம், உழைக்கும் பெண்கள் அமைப்பு, தாஜ் ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க உதவிச் செயலாளர் ஒருவர் கூறும்போதுகூட “அவர்கள் இலங்கை குறித்துப் பேசினார்கள், இலங்கையிலுள்ள நிலைமை பற்றி நமக்கு கவலைகள் உள்ளன என்பதை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன்” என்றுதான் கூறியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலே கூட, இலங்கைப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றியோ, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது பற்றியோ இருவரும் பேசியதாக எதுவும் இல்லை.
இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது ஐ.நா. மன்றம் ஜெயலலிதாவுக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதற்காக பெரிய விழா, பக்கம் பக்கமாக விளம்பரங்கள், புகழாரங்கள் அத்தனையும் நடைபெற்றது. ஆனால் பிறகு அது உண்மையல்ல என்று தெரிந்ததும், ஐ.நா. சபையல்ல, ஐ.நா. சபையின் ஆலோசனை அமைப்பு என்றும், மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்றும் முகவரியை மாற்றினார்கள். கோபி அன்னனுக்கு அளிக்கப்பட்ட விருதுதான் எங்கள் அம்மாவுக்கு தரப் போகிறார்கள் என்றார்கள்.
அதன்பிறகுதான் ஐ.நா. சபையில் இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக உரையாற்றச் சென்ற ஆர். சண்முகசுந்தரம், எம்.பி, அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த்சர்மா மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாத்ரு பூமி ஆசிரியர் மாதவன் குட்டியும் விசாரித்து அந்த விருதுக்கும் ஐ.நா.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்கள்.
அதைப்போலவே தான் இப்போதும் இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா தீர்மானம் போட்டதால், அமெரிக்கா பயந்து கொண்டு இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாக செய்தி பரப்ப முயலுகிறார்கள். அதிலும் அ.தி.மு.க. அமைச்சரவையிலே உள்ள மூத்த அமைச்சர்களே ஏடுகளில் அரைப்பக்க அளவிற்கு கொடுத்துள்ள விளம்பரங்களில் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அமெரிக்காவைப் பற்றி உண்மைக்கு மாறாக இப்படியெல்லாம் விளம்பரம் செய்யலாமா? அது ஒரு வெளிநாட்டுப் பிரச்னை அல்லவா?
மாலையில் ஏடுகளைப் பிரித்தால் பக்கம் பக்கமாக ஜெயலலிதாவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் உட்கார்ந்திருக்கின்ற புகைப்படங்களை விதம் விதமாகப் போட்டு வார்த்தை ஜாலங்கள் தான்.
தமிழகத்து மாணவச் செல்வங்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றார்கள். அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்போது புத்தகம் வரும் என்று தெரியாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் மாணவர்களை தன்னுடைய பிடிவாதம் காரணமாக இன்னலுக்கு ஆளாக் கிய ஜெயலலிதா அம்மையாரைப் பற்றி இப்படி இல்லாத செய்திகளையெல்லாம் வெளியிட்டு, அதிலே இன்பம் காணுகிறார்களே, பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய சாட்சாத் அதே ஜெயலலிதாவேதான் இன்று பக்கம் பக்கமாக விளம்பரப் பஜனைப் பாடப்படுகிற உலகப் புகழ் உத்தமத் தமிழச்சி ஆகிவிட்டார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
அவர்தான் பாராட்டியிருக்கிறார்...
பிரகாஷ் எம்.ஸ்வாமி, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். தற்போது நியூயார்க்கில் இருக்கிறார். தமிழகம் வரும்போது ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டு ஓரிரு முறை சந்தித்துமிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் அமெரிக்காவிற்கு வர வேண்டும், உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கச் செய்கிறேன், விருது வழங்க ஏற்பாடு செய்கிறேன், தெருவுக்குப் பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றெல்லாம் கூறுவார்.
கடந்த முறை தி.மு.க ஆட்சியில் ஒரு முறை சந்தித்தேன். அடுத்த முறை வாய்ப்பு வழங்க முடியவில்லை. தி.மு.க ஆட்சியில் அவருக்கு கலைமாமணி விருதே வழங்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது கூட அமெரிக்க நாடு வாழ் தமிழர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அழைத்து வரத் தனக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்று கோரினார். அவர்தான் தற்போது வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவை பாராட்டியிருக்கிறார்.
இதே பிரகாஷ் ஸ்வாமி 2&2&2010ல் என்னைச் சந்தித்த செய்தி ஏடுகளில் அப்போதே வந்தது. அந்தச் செய்தியில், �அமெரிக்காவில் உள்ள நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி, முதல் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்ட அவர், இந்த மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் கலந்து கொள்ள விருப்பதாகக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஸ்வாமி, முதல்வர் கருணாநிதியின் சமுதாயச் சேவையைப் பாராட்டி, அமெரிக்க நாடாளுமன்றம் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அமெரிக்க காங்கிரஸ் மகாசபை விருது வழங்கப்பட விருப்பதாகத் தெரிவித்தார். முதல் முறையாக இந்தியத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த விருதை, கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது நியூயார்க் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் நேரில் வழங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்� என்கிறது அந்த செய்தி.

No comments:

Post a Comment