கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

மு.க.ஸ்டாலினை கைது செய்தது சரியல்ல - மார்க்சிஸ்ட்



மு.க.ஸ்டாலினை கைது செய்தது சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் சென்றபோது பேருந்து கவிழ்ந்து விஜய் (வயது 12) என்ற மாணவன் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். மாணவன் விஜயை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
இந்த விபத்திற்கு திருவா ரூர் மாவட்ட திமுக செயலா ளர் பூண்டி கலைவாணன் காரணமென்றும் அவரை கைது செய்ய காவல்துறை முயன்றதாகவும், இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட பலர் திருத்துறைப்பூண்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது சரியான நடைமுறையாகாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.
எனவே, பேருந்து விபத்து குறித்து முழுமையாக விசாரித்து விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்ற போது கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல - கி.வீரமணி :

தஞ்சை வல்லத்தில் இன்று (30.7.2011) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,


தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை திடீரென்று காவல்துறையினர் கைது செய்து திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.


பொதுவாக எல்லோருக்குமே இது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டியவர்களை காரண காரியம் இல்லாமல் இது போல கைது நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? என்ன குற்றம் செய்தார்கள் என்பதுகூட வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்படுவது என்பது கண்டிக்கப்படக் கூடியது.


உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும். பொது வாழ்க்கையில் கருத்துக்களால் மாறுபடுகிறவர்களை எல்லாம் கைது செய்யலாமா? அடக்குமுறை ராஜ்ஜியம் இங்கு நடக்கிறது என்பதுதான் பொருளாகுமே தவிர, ஜனநாயகத்திற்கு இது அழகாகாது.


குறிப்பாக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. சிறைச்சாலைக்குப் போக அவர் அஞ்சக் கூடியவர் அல்ல என்றாலும், அதற்குரிய காரண காரியத்தோடு அரசு விளக்கினால் அவர் அதை மகிழ்ச்சியோடு ஏற்பார். எதிர்கொள்வார்.

ஆனால் இந்த நிலை தொடரக்கூடாது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள் என்றார்.



No comments:

Post a Comment