கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

அமைதியான முறையில் 1ம் தேதி போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் - திமுக தலைவர் கருணாநிதி


திட்டமிட்டபடி வரும் 1ம் தேதி திமுக போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் 30.01.2011 அன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:
** திமுக நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் பல முன்னணியினரை அரசு கைது செய்துள்ளதே?
*** இப்போதுதான் அது பற்றி எங்களுக்கும் செய்தி வந்தது.
** 1ம் தேதி திமுக சார்பில் நடத்த இருக்கும் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகதான் அரசு இவ்வாறு செய்கிறதா?
*** திமுக ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. அப்போது திமுக அரசு, போராட்டம் நடத்தியவர்களை எப்படி நடத்தியது என்பதும் காலையில் கைது செய்து மாலையில் விடுவித்ததும் உங்களுக்கெல்லாம் தெரியும்.
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் அம்மையாரின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்கு மேலும் மேலும் தூபம் போடும் காவல் துறையினரின் நடவடிக்கைகளும் அத்துமீறி போய்க் கொண்டு இருக்கின்றன.
** 1ம் தேதி போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா?
*** போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். போராட்டம் காவல் துறையின் அராஜகங்களை கண்டிப்பதற்காகவும் பொய் வழக்குகள் போடுவதை கண்டிப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டு நடைபெறுகின்ற போராட்டம் ஆகும். அதனால் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடைபெறும்.
** பொய் வழக்குகள் போடுவது தொடர்ந்தால் உங்கள் தலைமையில் ஏதாவது போராட்டம் நடைபெறுமா?
*** அவசியப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி சிந்தித்து செயல்படுவோம்.
** பெங்களூரில் நடைபெறுகிற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த காரணத்தால் ஜெயலலிதா பழி வாங்குவதற்காக இப்படியெல்லாம் செய்கிறாரா?
*** பழி வாங்குவதற்கு அவர்களுக்கு காரணம் வேண்டியதில்லை. பழி வாங்க வேண்டும் என்று நினைத்தாலே பழி வாங்குவார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment