![](http://3.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TMJ5jkvQvKI/AAAAAAAABIg/f05fmTZi7yo/s400/J.jpg)
முதலமைச்சர் கலைஞர் 13.10.2010 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசு அவர்களும், பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துக் கொடுத்த கோரிக்கை தொடர்பாக - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுடன் 19.10.2010 அன்று கலந்தாலோசனை நடத்தினர். இந்தக் கலந்தாலோசனையின்போது, சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், அரசுத் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, அய்.ஏ.எஸ். நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், அய்.ஏ.எஸ்., சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் செயலாளர் இராமநாதன், அய்.ஏ.எஸ்., ஆகியோர் உடனிருந்தனர். |
No comments:
Post a Comment