கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 24, 2010

திமுக இளைஞர் அணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி - துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


திமுக இளைஞர் அணி சார்பில் திருவண்ணாமலையில் நேற்று (23.10.2010) மாநில அளவில் மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டது. அதில், முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவிலான இறுதிச் சுற்று போட்டி நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடந்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பார்வையாளர்களாக பங்கேற்றனர். நேற்று காலை 9 மணிக்கு போட்டிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாலை 4 மணி வரை அரங்கத்தில் அமர்ந்து, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை துணை முதல்வர் உற்சாகப்படுத்தினார். அரங்கத்துக்கு அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் மாணவர்களுடன் துணை முதல்வர் கலந்துகொண்டார்.
ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?, திராவிடத்தின் நிலை உயர்த்திய தலைவர்கள் எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும், புறநானூற்று தாய், இதயத்தை தந்திடு அண்ணா என்ற தலைப்பில் கவிதை ஒப்புவித்தல் போட்டியும், அறிஞர் அண்ணா வழியில் கலைஞர், மொழிப்போர் களத்தில் ஐயா, அண்ணா, கலைஞர் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களை தனித்தனியே அழைத்து ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். போட்டிகள் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் இன்று (24.10.2010) பரிசுகளை வழங்குகிறார்.

No comments:

Post a Comment