![](http://4.bp.blogspot.com/_d1iGc9LBTmw/TMsBmIZ2kVI/AAAAAAAABM4/OioYD3Fws4k/s400/A.jpg)
மும்பையில் நேற்று (28.10.2010) இந்தியா கெம் 2010 கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பெற்றுக் கொண்டார் . அருகில் மகாராஷ்டிரா ஆளுநர் கே.சங்கரநாராயணன்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச் சர் மு.க.அழகிரி வர வேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய ரசாயனத் துறை யில் வெளிநாட்டு நிறு வனங்களின் முத லீட்டை அதிக அளவில் கவர இதுபோன்ற மாநாடுகள் வாப்பளிப் பதாக தெரிவித்தார்.
சமுதாய முன்னேற் றத்தில் ரசாயனத்துறை முக்கிய பங்காற்றுவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டிருப்பதாக அவர், கடந்த ஆண்டு களில் ரசாயனத்தை துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண் டுள்ளதாக தெரிவித்தார். சிறு மற்றும் குறு ரசா யன நிறுவனங்கள் மேம் பாட்டுக்காக தொழில் வளர்ச்சி நிதியம் உரு வாக்குவது குறித்து ரசாய னத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ரசாய னத்துறையை மேம் படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மகாராஷ் டிர ஆளுநர் சங்கர நாராயணன், ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் சிறீகாந்த்குமார் ஜேனா மற்றும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.
No comments:
Post a Comment