கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, October 28, 2010

முல்லை பெரியாறு அணை பிரச்சினை : முதல்வர் கலைஞரிடம் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் விளக்கம்


தமி ழக- கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தொடர்பாக, தமிழ்நாட்டுக்கும், கேர ளாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச் சினை இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாகக் கூறி அதன் அருகில் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்து அதற்கான ஆய்வு களையும் நடத்தியது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஏற்கெனவே உள்ள அணை நன்றாக இருப்ப தால், புதிய அணை தேவை இல்லை என்று தமிழகம் சார்பில் ஆதா ரங்களுடன் வலியுறுத் தப்பட்டு வருகிறது. மேலும், தற்போதுள்ள அணையில் 147 அடி வரையில் தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண் டும் என்றும் தமிழக அரசு கோரி வருகிறது. அதற்கு கேரளா ஒப் புக்கொள்ளவில்லை.

முல்லை பெரியாறு பிரச் சினை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத் தில் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் விசாரணை நடத்துவதற் காக, 5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு உயர் நிலைக்குழுவை, உச்ச நீதி மன்றம் நியமித்தது. இந் தக் குழுவுக்கு, உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைவராக உள்ளார்.

தமிழகத்தின் சார் பில், உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளா சார்பில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் மற்றும் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முன் னாள் பொறியாளர் சி.கே. தட் ஆகியோர் உறுப்பினர்களாகவும், உறுப்பினர் செயலா ளராக சி.கே.மேத்தாவும் நியமிக்கப்பட்டார்கள்.

அணையை நேரில் ஆய்வு

இந்தக் குழு, தமிழகம் மற்றும் கேரளா தரப்பு கருத்துகளை கேட்ட றிந்து, 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இந்த குழுவி னர், வரும் டிசம்பர் மாதத்தில், முல்லை பெரி யாறு அணையை நேரில் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த நிலையில், முத லமைச்சர் கலைஞரை, முல்லை பெரியாறு அணை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழு வின் உறுப்பினரான, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சும ணன் 25.10.2010 அன்று சந்தித்துப் பேசினார். முதலமைச்ச ரிடம் அவர், முல்லை- பெரியாறு அணையை பார்வையிட செல்வது தொடர்பாக விவரங் களை விளக்கமாக எடுத் துக் கூறினார்.

நீதியரசர் விளக்கம்

இதுபற்றி கேட்ட போது, நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் கூறியதா வது:- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர் பாக அமைக்கப்பட்டுள்ள குழு, வரும் டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரி யாறு அணையை பார் வையிடுகிறது. இந்தக் குழுவில் இடம்பெற் றுள்ள நான் உள்ளிட்ட குழுவினர், மதுரையில் இருந்து புறப்பட்டு, தேனி, குமுளி வழியாகச் சென்று, தமிழகத்தில் உள்ள முல்லை பெரி யாறு அணைப் பகுதியை பார்வையிடுகிறோம். அதன்பிறகு, தேக்கடி சென்று கேரள பகுதியில் உள்ள முல்லை- பெரி யாறு அணைப்பகுதியை ஆய்வு செய்யவுள்ளோம். இந்தப் பயணம் சாலை வழியாக இருக்கும். எங் களது பயண விவரத்தை பற்றி முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து விளக் கம் அளித்திருக்கிறேன்.

இதுபோல், ரஷிய நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தை அறிந்து கொள்வதற் காக, அங்கு சென்று வந் தேன். அப்போது, மாஸ்கோ பல்கலைக்கழ கத்தில், தமிழ் பிரிவு செயல்படுவதையும், அதில் 20 மாணவர்கள் தமிழ் கற்பதையும் அறிய முடிந்தது. அவர்களுக்கு, அலெக்சாண்டர் என்ற பேராசிரியர் தமிழ் பயிற்றுவித்து வருகிறார். சமீபத்தில் நடை பெற்ற கோவை மாநாட் டில், தொல்காப்பியம் பற்றிய ஆய்வுக்கட்டு ரையை அலெக்சாண் டர் சமர்ப்பித்துள்ளார். அவர், ரஷியாவில் தமி ழைப் பயிற்றுவிப்பதற் காக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியரை 2 ஆண்டு காலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றியும் முதல மைச்சரிடம் கூறினேன். அவர், தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பதற் கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள் ளார். இவ்வாறு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறினார்.

No comments:

Post a Comment