கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, October 17, 2010

சௌந்திரா கைலாசம் மரணம்: கலைஞர் இரங்கல்


புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான சௌந்தரா கைலாசம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. மறைந்த நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் மனைவியான இவர், ஏராளமான கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயாரான இவர், திரைப்பட தணிக்கைத் துறை, அகில இந்திய வானொலி போன்றவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். அளவற்ற அருளாளர் என்ற இஸ்லாமிய நுலை எழுதிய முதல் இந்து பெண்மணி என்ற புகழையும் பெற்றவர்.


அண்மையில் தமிழக அரசு இவருக்கு பாரதியார் விருது வழங்கி கவுரவித்தது. சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.

சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,


என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள்.

அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment