கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, August 29, 2010

காவல்துறையினர் மக்களின் நண்பனாக மதித்திடும் வகையில் மனிதாபிமானத்துடன் பணியாற்றிட வேண்டும் - காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அறிவுரை


சென்னை தலைமை செயலகத்தில் ஆட்சியர் கள், காவல்துறை அதி காரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடந்தது. முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.

ஒவ்வொருவரையும் பாதுகாத்திடவேண்டும்

இரண்டாவது நாளான நேற்று(28.8.2010) காலை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் கலைஞர் தலைமையேற்று உரை யாற்றினார். அவர் கூறிய தாவது: தமிழகத்தில் வாழும் குடிமக்கள் ஒவ் வொருவரையும் பாது காத்திட வேண்டும்; பொது மக்களின் அமைதியான வாழ்வுக் குப் பங்கம் விளைத்திடும் எவரையும் எந்தவித மான சலுகையும் காட் டாமல் அவரைச் சட் டத்தின்முன் நிறுத்தி, அவருக்கு உரிய தண் டனைகளை வழங்குவ தன் மூலம் நாட்டில் பொது அமைதியை பொது மக்களின் நல் வாழ்வினை நிலைநாட் டிட முடியும் என்று இந்த அரசு கருதுகிறது. இதனை இதயத்தில் தாங் கிய வண்ணமே காவல் துறை பணிகளை நிறை வேற்றி வருகிறது. இந்த வகையில் அரசுக்குத் துணை புரிந்துவரும் காவல் துறை அதிகாரி களாகிய உங்கள் அனை வருக்கும் எனது நன் றியை உரித்தாக்குகிறேன். தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டம்ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. கடுமையான நடவடிக்கை

காவல்துறையினர் தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் முனைந்து செயல்பட்டு, குற்றங்கள் புரிவோர் மீது கடுமையான நடவடிக் கைகளை எடுத்து. ஏழை, எளிய மக்களின் உரிமை களுக்கும், நலன்களுக் கும் பாதுகாவலர்களா கத் திகழ்ந்து, தமிழ கத்தை அமைதியின் உறை விடமாக்கி, அரசின் நலத் திட்டங்கள் தங்குதடை யின்றி மக்களைச் சென்ற டைவதற்குப் பெரிதும் துணை புரிய இந்த மாநாடு வழிவகுக்கும் என நம்புகிறேன். மாநிலத்தில் பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் ஜாதி, மத பேதங்களைத் தூண்டி விட்டுப் பூசல்களை ஏற் படுத்துவோர் மீதும்; கள் ளச்சாராயம், போதை மருந்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமுதாயக் குற் றங்களில் ஈடுபடுவோர் மீதும்; சொத்துக்களை ஆக்கிரமித்தல், காலி செய்தல், ஆட்களைக் கடத்தி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பொது மக்களை நேரடியாகப் பாதிக்கும் குற்றச்செயல் களில் ஈடுபடுவோர் மீதும்; பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் எந்தவிதமான பார பட்சமுமின்றித் தடுப் புக்காவல் சட்டங்களின் கீழான நடவடிக்கைகள் உட்பட அனைத்து வகை யிலும் கடுமையான நட வடிக்கைகளை மேற் கொள்வது தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறேன்.

மனித உரிமை பாதிக்காத வகையில்

பயங்கரவாதச் செயல்களை எதிர் கொள்வதற்காக நாட்டிலேயே முதன் முதலாக நெருக்கடி கால மேலாண் மைத் திட்டம், செயலாற்றுதற்குரிய வரையறுக்கப்பட்ட நடைமுறை களைத் தயார் செய்து, அதிரடி நடவடிக்கைக் குழுக்கள், வெடிகுண்டு களைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு காவல்துறை, கப்பற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை ஆகியவை ஆபரேசன் பேரி காட், ஆபரேசன் ரக்சாக், ஆபரேசன் அம்லா என்ற பெயர்களில் கூட்டு ஒத்திகைப் பயிற்சிகளை நடத்தி, நெருக்கடியான காலங்களில் ஒருங்கிணைந்து செயல் படும் திறத்தை மேம்படுத்தியும் நமது மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக விளங்கி வருகிறது. இத்தகைய முறையில் துல்லியமாகத் திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல் பட்டுத் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்து வரும் காவல்துறை அதிகாரிகளை மெத்தவும் பாராட்டுகிறேன். காவல் துறையினர், வழக்குகளில் குற்றவாளி களைக் கைது செய்யும் போதும், விசாரணைக்கு உட்படுத்தும் போதும், தனி மனித சுதந்திரமும், மனித உரிமை களும் பாதிக்கப்படாத வகை யில் உச்சநீதிமன்றமும், அரசும் அவ்வப் போது அளித்து வரும் அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடித்து, குறிப்பாகக் காவல் கைதி மரணங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் விழிப்புடன் கடமையாற்றிட வேண்டும்.

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திட

பொதுமக்கள் காவல் நிலையங் களுக்கு வரும்போது அவர்களைக் கண்ணியமாக நடத்துவதுடன், அவர்கள் அளிக்கும் புகார்களின் பேரில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வழக்குகளைப் பதிவு செய்து, மேல் நடவடிக்கைகள் எடுத்து, குற்றவாளி களுக்குத் தண்டனைகள் பெற்றுத்தந்து சட்டத்தின் மாட்சிமை மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்திட வேண்டுமெனக் காவல் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் நண்பர்கள்

காவல் துறையினர், குற்றத்தடுப்பு செயல்களிலும், கண்டுபிடிக்க முடியாத வழக்குகளிலும் தீவிர கவனம் செலுத்தித் தலைமறைவாக இருந்து வரும் எதிரிகளைத்தேடி உடனுக் குடன் கைது செய்திட வேண்டும். பொது மக்களிடையே குற்றங்கள் நிகழாமல் தடுப்பதுகுறித்த விழிப்பு ணர்வை வளர்ப்பதுடன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களை ஈடுபடுத்தி, எங்கும் குற்றங்கள் நிகழாத இயல்பான சூழ்நிலை உருவாக விழிப்புடன் செயலாற்றிட வேண்டும். காவல்துறையினர், மக்களின் பிரச் சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி, அவர்களது அனைத்துக் குறைகளையும் தீர்த்து வைத்து, பொது மக்கள் தங்களை இனிய நண் பர்களாகக் கருதி மதிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும். அப்படிப்பணி யாற்றுவதன்மூலம் காவல்துறைப் பணிகளில் தமிழகத் திற்கு இருந்து வரும் புகழையும், பெருமையையும் தொடர்ந்து கட்டிக் காத்திட முடியும் என்று நம்புகிறேன். காவல் துறையில் சார் நிலையில் உள்ள குறிப்பாக களத்தில் உள்ள காவ லர்கள், தலைமைக் காவலர்கள் போன்றோர், பணி புரியும்போது தங்களுக்கு ஏற்படும் இடர்ப் பாடுகளைக் களைந்து, தங்களைக் காப்பதற்கு உயரதிகாரிகள் இருக் கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றும் வகையில், சார்நிலை அலுவலர்களிடம் பரிவு காட்டி, அவர்களை அரவணைத்து வழி காட்டி காவல் துறையின் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றிட முன்வர வேண்டுமென உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் கூறினார்.

No comments:

Post a Comment