கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 12, 2010

ரூ.1711 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் மதுரை, கோவை, நாகை, விருதுநகர், சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் - முதலமைச்சர்


மதுரை, கோவை, நாகை, விருது நகர், சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட் டங்களின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக் களுக்கு குடிநீர் வசதிகளை மேம் படுத் துவதற்காக 5 கூட்டுக் குடிநீர்த் திட் டங்களையும் ஒரு குடிநீர் மேம்பாட்டுத்

திட்டத்தையும் நிறை வேற்றுவதற்கு முதல மைச்சர் கலைஞர் ஆணை யிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு :

105 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நாகப் பட்டினம் மாவட்டம்,

சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 295 குடியிருப்புகள் மற்றும் 315 வழியோரக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ;

173 கோடி மதிப்பீட் டில் விருதுநகர் மாவட் டத்திலுள்ள 7 பேரூராட்சி கள் மற்றும் இராச பாளையம், திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி ஆகிய

ஒன்றியங்களைச் சார்ந்த 395 ஊரகக் குடியி ருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 190 கோடி ரூபாய் மதிப்பீட் டில் விருதுநகர் மாவட் டம், அருப்புக் கோட்டை, காரியாப் பட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த 637 குடியிருப்பு களுக்கான கூட்டுக் குடி நீர்த் திட்டம் ;

234 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக் கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்தி ராயிருப்பு, திருவில்லி புத்தூர், அருப்புக் கோட் டை ஆகிய ஒன்றியங் களைச் சார்ந்த 755 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ; 784 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட் சிகள், அ.வெள்ளாளப் பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங் காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங் களைச் சேர்ந்த 1430 குடி யிருப்புகள் மற்றும் சிவ கங்கை மாவட்டத்தி லுள்ள சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ;

224 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் கோயம்புத் தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சி கள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங் களைச்சார்ந்த 965 ஊரகக் குடியிருப்பு களுக்கான குடிநீர் மேம் பாட்டுத் திட்டம்; என 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், ஒரு குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தையும், மொத்தம் 1711 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற் றுவதற்கு நிர்வாக ஒப்பு தல் அளித்து முதலமைச் சர் கலைஞர் ஆணை யிட்டுள்ளார்.

No comments:

Post a Comment