கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 30, 2010

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தீர்மானம்


இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை உயர்த்தியதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு பாராட்டுத் தெரிவித்து மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.எஸ்.வி. சித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.செங்குட்டுவன், டி.உதயசூரியன், சி.கோவிந்தசாமி, எஸ்.குணசேகரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலர் க. அலாவுதீன், நிதித் துறை முதன்மை செயலர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டி.உதயசந்திரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பாக்கியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் தொகுப்பு வீடுகளுக்கு மாநில அரசின் பங்குத் தொகையான 11 ஆயிரத்து 250 உடன் 15 ஆயிரம் உயர்த்தி, 26 ஆயிரத்து 250 ஆக நிர்ணயம் செய்து இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசின் பங்குத்தொகையுடன் ரூபாய் 60 ஆயிரமாக கடந்த 1.4.2010 முதல் தமிழக முதலமைச்சர் கலைஞர் உயர்த்தி வழங்கினார்.

தற்போது மேலும், 15 ஆயிரம் உயர்த்தி மாநில அரசின் பங்குத்தொகையாக 41 ஆயிரத்து 250 வழங்கப்படும் என்று அறிவித்து, ஒரு குடியிருப்பு கட்டுவதற்கு மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் கலைஞருக்கும், மாநில அரசின் பங்குத் தொகையினை உயர்த்தியதற்கு உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களான மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பொன்விழா சுய வேலை வாய்ப்புத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம்,

முழு சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை தமிழகத்தில் திறம்பட செயல்படுத்தியமைக்காக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததற்காகவும், அகில இந்திய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்காகவும் இக்கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment