கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, August 4, 2010

மின்சார கட்டணம் : முதல்வர் கலைஞர் விளக்கம்


" பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைத் தல், நிருவாகத் திறனை மேம்படுத்துதல், புதிய மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி சுயமின்னுற்பத்தியைப் பெருக்குதல், அதன் விளைவாக வெளி மாநி லங்களில் இருந்தும், தனி யார் மின் உற்பத்தி நிறு வனங்களிடமிருந்தும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் குறைத்தல் ஆகிய நட வடிக்கைகளை மேற் கொண்டிருந்தால் அனைத்துத் தரப்பினரை யும் பாதிக்கும் மின் கட் டண உயர்வைத் தவிர்த் திருக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

இதே கருத்தைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற வேறு சில கட்சி யினரும் தெரிவித்திருக் கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்கின்ற இந்த அனைத்து முயற்சி களையும் கழக அரசு மேற்கொண்ட காரணத் தினால்தான் நான் காண்டு காலமாக மின் வெட்டி னால் ஏற்படக்கூடிய தொல்லைகளையும் சமாளித்து, மின் கட் டண உயர்வினை தமிழக அரசு தவிர்த்து வந்தது.

மின்னுற்பத்தி என்பது முதல் நாள் இரவு அறிவித்து மறுநாள் காலையில் உற்பத்தியைத் தொடங்கி விட முடி யாது. மின்னுற்பத்தியைப் பெருக்குவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதையும், தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும் தமிழ் நாட்டு மக்கள் நன்கறி வார்கள். ஒரு சிலர், அனைத்துத் தரப்பினரை யும் இந்த மின் கட்டண உயர்வு பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அது தவறான தகவ லாகும். இரண்டு மாதத் துக்கு 600 யூனிட்டு களுக்குக் குறைவாக மின் சாரம் பயன்படுத்தும் வீடுகளின் மின் நுகர் வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர் வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழி பாட்டுத்தலங்கள், வேளாண் மின் நுகர் வோர் ஆகியோருக்கு எந்த விதமான மின் கட்டண உயர்வும் இல்லை என்று தெளிவாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்துள்ளது. அதற்குப் பிறகும் அனைத்துத் தரப்பினரை யும் பாதிக்கும் என்றும் அவர்கள் சொல்லியிருக் கிறார்கள். தமிழகத்தில் வீடுகளுக்கு மின்சாரம் உபயோகிப்போர் எத் தனை பேர் என்ற கணக் கெடுப்பைப் பார்த்தால், மொத்தம் 149.86 லட்சம் பேரில் இரண்டு மாதங் களுக்கு 200 யூனிட்டு களுக்கும் குறைவாக மின் சாரம் பயன்படுத்து வோ ரின் எண்ணிக்கை 118.05 லட்சம் பேர்களாகும். இவர்களுக்கு எந்த வித மான மின் கட்டண உயர்வும் தற்போது செய் யப்படவில்லை.

இரண்டு மாதங் களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை மின் சாரம் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரம் பேர்களாகும். இவர்க ளுக்கும் மின் கட்டணத் தில் எந்தவிதமான உயர் வும் தற்போது செய்யப் படவில்லை.

இரண்டு மாதங் களுக்கு 401 யூனிட் முதல் 600 யூனிட் வரை மின் சாரம் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 10 ஆயிரம் பேர்களாகும். இவர்களுக் கும் தற்போது எந்தவித மான மின் கட்டண உயர்வும் செய்யப்பட வில்லை.

இரண்டு மாதங்க ளுக்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன் படுத்துவோரின் எண் ணிக்கை தமிழகத்தில் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களாகும். இவர் களுக்கு மட்டும் தற் போது; கட்டண உயர் வில் யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அள விற்கு உயர்த்தப்பட் டுள் ளது.

மொத்தம் 137 லட் சத்து 88 ஆயிரம் பேர் களில், 3 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மட் டுமே அதாவது மூன்று சதவிகிதத்திற்கும் குறை வாக உள்ளவர் களுக்கு மட்டுமே யூனிட் ஒன் றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவிற்கு மின் கட்ட ணம் ஏழு ஆண்டுக ளுக்குப் பிறகு உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் இந்த 3 லட்சம் பேருக்கும் கூட மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று அவர்கள் சொல்லியி ருக்கிறார்கள்.

இந்த மூன்று லட்சம் பேரும் யார் என்றால், இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தைப் பயன் படுத்துவோர் ஆவர். அவர்கள் எல்லாம் தங் கள் வீடுகளுக்கு ஏ.சி., பிரிட்ஜ், சலவை இயந்தி ரம், மிக்ஸி போன்ற நவீன வசதிகளை அதிகமாகப் பயன்படுத்துவோர் ஆவர்.

தினமணி நாளிதழில் கூட குடிசைகளுக்கு பழைய கட்டணம் மாதம் பத்து ரூபாய் என்றும், புதிய கட்டணம் பத்து ரூபாய் என்றும் கட்டம் கட்டி வந்துள்ளது. இது கூட சரியல்ல. இந்தப் பத்து ரூபாய் கட்டணத் தையும் மானியமாக தமிழ்நாடு அரசே மின் வாரியத்திற்குத் தந்து விடுகிறது. அதனால் அனைத்துக் குடிசை வாசிகளுக்கும் மின் கட்டணமே கிடை யாது என்பதுதான் உண்மை. இத்தகைய குடி சைவா சிகள் தமிழகத்தில் 11 லட்சத்து 98 ஆயிரம் பேர்களாவர். மின் பகிர் மானத்தில் ஏற்பட்டு வரும் மின்சார இழப்பு 20082009இல் 18.3 விழுக் காடு என்றும், அது தற் போது 18.9 விழுக்காடாக உயர்ந்து விட்டது என் றும், அது அதிர்ச்சி தரத் தக்கதாக உள்ளது என் றும் டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

இந்திய அளவில் மின் சார இழப்பு எவ்வளவு என்று பார்த்தால், 38 விழுக்காடு மின் பகிர் மானத்தில் இழப்பு ஏற் படுகிறது. இந்தியாவிலே உள்ள அனைத்து மாநி லங்களையும் எடுத்துக் கொண்டால், இந்தியா விலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த அளவிற்கு டில்லிக்கு அடுத்தபடி யாக மின்சார இழப்பு என்று புள்ளி விவரம் கூறுகிறது.

தற்போதுள்ள மின் இழப்பைக் கூட சரி கட்டுவதற்காக தமிழக அரசு புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண் டுள்ளது. மின்னுற்பத்தி பெருகி வாரியத்தின் வரு வாய் பற்றாக்குறை குறைந் தால் இப்போது உயர்த் தப்பட்டிருக்கும் மின் கட்டணம் குறைக்கப் படுமா என்பது குறித்து மின்வாரியம் தெளிவு படுத்த வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.

தற்போது அறிவிக்கப் பட்டுள்ள அறிவிப்பி லேயே சிறிய கடைகளை வைத்துள்ள வணிகர் களுக்கு இதுவரை கட்ட ணமாக யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 5.30 என்பது இன்று முதல் ரூ.4.30 என்று குறைக்கப் பட் டுள்ளது.

எனவே இந்த அர சைப் பொறுத்தவரை கட்ட ணத்தை உயர்த்தினால் உயர்த்தியதுதான் என்ற அளவில் இல்லாமல், நிலைமை முன்னேறி னால் கட்டணத்தையும் குறைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்போது குறைத்துள்ள செயலாகும்.

கடந்த நான்காண்டு காலமாக கழக அரசைப் பொறுத்தவரையில் மின் கட்டணமோ, பேருந்து கட்டணமோ உயர்த்தப் பட வில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன் கறிவார்கள். மின் வாரி யத்திற்கு மேலும் இழப்பு ஏற்பட்ட நிலையிலே எல்லாம் கூட தமிழக அரசு அதற்கான மானி யங்களை வழங்கி வரு கிறது என்பதையும், தற் போது நிலைமையை ஓரளவுக்கு சரிகட்டும் வகையிலே தாங்கக் கூடியவர்களுக்கு மட்டும் இந்தக் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இதிலே கூட ஒழுங்கு முறை ஆணையம் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன் படுத்துவோருக்கு கட் டண உயர்வு செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்திய நிலையிலே கூட நானே அவர்களை வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் டுகள் வரை பயன்படுத்து வோருக்கு எந்த கட்டண உயர்வும் செய்யப்பட வேண்டியதில்லை என்று கேட்டுக் கொண்டு அவர் களை ஒப்புக் கொள்ள வைத்தேன்.

இந்த மின் கட்ட ணங்களை மற்ற மாநிலக் கட்டணங்களோடு ஒப் பிட்டுப் பார்த்தால்கூட வீட்டு உபயோகத்திற்காக மின்சாரத்தைப் பயன் படுத்துவோருக்கு தமிழ் நாட்டில் யூனிட் ஒன் றுக்கு ரூ.2.85 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

ஆனால் யூனிட் ஒன் றுக்கு கேரளாவில் ரூ.3.39 மராட்டியத்தில் ரூ.4.83 மேற்கு வங்கத்தில் ரூ.3.57 உத்தரப் பிரதேசத்தில் ரூ. 3.15 கருநாடகாவில் ரூ.4.02 ஆந்திராவில் ரூ. 3.51 குஜராத் மாநிலத்தில் ரூ.3.64 டில்லியில் ரூ.3.68 என்ற அளவிற்கு தற் போது கட்டணம் வசூ லிக்கப்படுகின்றது என் பதை ஒப்பிட்டுப் பார்த் தால், தமிழகத்தில் எந்த அளவிற்கு குறைவான கட்டணம் வசூலிக்கப் படுகிறது என்பதைப் பாமர மக்களும் புரிந்து கொள்ளலாம் ". இவ்வாறு முதல்வர் கலைஞர் கூறி யிருக்கிறார்.

No comments:

Post a Comment