
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் பதவியில் இருந்து வி.சி.குகநாதன் ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து, வி.சி.குகநாதன் கூறியதாவது:
திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன்.
என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன்.
இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் ராஜினாமா :
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம.நாராயணன் ராஜினாமா செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்
பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா :
சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற வகையில் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற பொறுப்பை அளித்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒரு லிட்டர் ரூ.3.50 என்று விற்ற பதநீருக்கு பத்து ரூபாய் என்று விலையை உயர்த்தித் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பனைமரத் தொழிலாளி, தான் மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் கருவியொன்றை கனமற்ற உலோகத்தில் செய்ய வேண்டும்.
பனைச் செல்வம் பெருஞ்செல்வம். உடல் நலம் தரும் செல்வம். அதை வளர்க்கவும் நிற்கின்ற பனைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் மேற்கொண்டு பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஊதியம் இல்லாத வேலையினாலும் எளியோர்க்கும் நாட்டிற்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அரசு தந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன். நான் பணியாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்த அரசுக்கும், நான் பதவியில் இருந்த போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்கிறேன் என்பதையும், பணிமனை வருவதற்கு தந்திருந்த அரசு காரையும் ஒப்படைக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ராஜினாமா
அரசு பொறுப்பு - சுப.வீரபாண்டியன் விலகல் :
புதிய அரசு பதவி ஏற்பு - வாரியத்தலைவர்கள் ராஜினாமா :
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து இருப்பதாக, இதுவரையில் அந்தப் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன் அறிவித்துள்ளார்.
இதேபோல், அறிவியல் தமிழ் மன்றம் துணைத்தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், சமூக நலவாரியத்தலைவர் பதவியில் இருந்து கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வக்பு வாரிய உறுப்பினர்கள் விலகல் :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில், �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கலிலூர் ரகுமான், திருப்பூர் அல்தாப் உசேன் ஆகியோர், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளனர். தமிழ்நாடு அரசு சமூக நீதிக்குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் திருப்பூர் அல்தாப் விலகினார். இதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர், என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment