கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 1, 2011

சர் பிட்டி தியாகராயர் பிறந்தநாள் : துணை முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை


சர் பிட்டி தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சர் பிட்டி தியாகராயரின் 160வது பிறந்த தினம் 27.04.2011 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள சர்பிட்டி தியாகராயர் திருவுருவச் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் அருகில் அவரது உருவப்படமும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. திமுக பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் 27.04.2011 அன்று காலை சர்பிட்டி தியாகராயர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., வசந்தி ஸ்டான்லி எம்.பி., சங்கரி நாராயணன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மண்டல ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, சர்பிட்டி தியாகராயர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலாளர் சிவகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் ஆஷிஷ்குமார் ஆகியோரும், சர் பிட்டி தியாகராயர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment