கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 6, 2011

2ஜி வழக்கில் குற்றமற்றவராக வெளிவருவேன்: கனிமொழி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக டெல்லி வந்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்த வழக்கில் இருந்து குற்றமற்றவராக வெளிவருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கூட்டுச்சதியாளராக சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அவர் அளித்த பேட்டியில், "இது மிக மிக மோசமான குற்றச்சாட்டு. இதில் இருந்து குற்றமற்றவர் என நிரூபித்து வெளிவருவேன் என்று மிக உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

டெல்லியில் 05.05.2011 அன்று என்.டி.டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், "நான் மோசமானவற்றை எதிர்கொள்ள தயாராகிவிட்டேன். நான் ஒரு பெண் என்பதற்காக, இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இந்த இக்கட்டான நேரங்களில், எனது குடும்பமே என்னுடன் ஒன்றாக இருக்கிறது," என்றார்.

இதனிடையே மற்றொரு சேனலான சி.என்.என். ஐ.என்.என்-னுக்கு அவர் அளித்த பேட்டியில், "என்னை சிபிஐ கைது செய்தால், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன். என்னை சுலமான இலக்காக்கிவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம்.

நான் முன்ஜாமீன் கோர மாட்டேன். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எதையும் எதிர்த்து நிற்க தயாராகிவிட்டேன்," என்று கனிமொழி கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், கடந்த மாதம் 25-ம் தேதி சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, கனிமொழி 06.05.2011 அன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார். சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. 04.05.2011 அன்று டெல்லி சென்றார்.

2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.


`2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது.


அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; ``யூகத்தில் எதுவும் கூற முடியாது. 06.05.2011 அன்று என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது'' என்றார்.


கைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு; ``சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்'' என்று பதில் அளித்தார்.


``இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்'' என்றும் அவர் கூறினார்.


குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா? என்று கேட்கப்பட்டது.


அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்" என்றார்.


இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு, ``எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார்.


எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.

டில்லி வந்துள்ள கனிமொழி, செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால், என் பெயர் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. நிறைய பெயர்கள் இப்பிரச்னையில் அடிபட்டாலும், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் ஒருத்தியை மட்டும் அனைவரும் குறிவைக்கின்றனர். இது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.


நான் பலமில்லாதவள், எளிதில் வீழ்ந்துவிடுவேன் என கணக்கு போடுகின்றனரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு அவர்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நான் சட்டப்படி சந்திப்பேன். வழக்குகளை எதிர்கொள்வேன். வழக்கு விசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவளாக வெளியில் வருவேன். நான் சார்ந்துள்ள தி.மு.க.,வும் இதைத்தான் கூறியுள்ளது. என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றுவிடும் என சிலர் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை. எனது பிரச்னையை வைத்து தி.மு.க., - காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்பது குறித்தெல்லாம் கருத்து கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. இந்திய நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதிலும் உறுதியாக உள்ளேன்.


இவ்வாறு கனிமொழி கூறினார்.

No comments:

Post a Comment