கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, May 10, 2011

மருத்துவம், கல்வி உதவி ஸீ3.20 லட்சத்தை முதல்வர் வழங்கினார் : 32 பேர் பயன் பெற்றனர்


நலிந்தோருக்கு மருத்துவம், கல்வி உதவிக்கு ஸீ3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார். இதன் மூலம் 32 பேர் பலன் அடைவார்கள்.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்கு கடந்த 2005ல் முதல்வர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில்
ஸீ5 கோடி தந்தார். இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திற்கு 2007ல் ஸீ1 கோடி வழங்கினார்.
மீதமுள்ள ஸீ4 கோடியில் கிடைக்கும் வட்டி தொகையை உதவியாக வழங்கி வருகிறார். நலிந்தோருக்கு முதல்வர் கருணாநிதி கடந்த பிப்ரவரி 2007ம் ஆண்டு முதல் நலிந்தோர் மருத்துவம், கல்விக்காக வழங்கி வருகிறார். இதுவரை 1 கோடியே 98 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த வட்டி தொகையில் 32 பேருக்கு தலா ஸீ10 ஆயிரம் வீதம் ஸீ3.20 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

No comments:

Post a Comment