கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, May 18, 2011

கொளத்தூர் தொகுதி : மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்


கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். வாக்களித்த மக்களுக்கு தொகுதி முழுவதும் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். முதல் நாளான 17.05.2011 அன்று 50, 54வது வட்டம் ஜி.கே.எம். காலனியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கினார்.
திறந்த ஜீப்பில் மு.க. ஸ்டாலினுடன், மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, மேயர் மா.சுப்ரமணியன், கு.க.செல்வம், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் சென்றனர். வழி நெடுகிலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆண்களும், பெண்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து, மலர் தூவி வரவேற்றனர். பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த ஊர்வலத்தில் துர்கா ஸ்டாலின், கோவி.செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். லோகோ ஒர்க்ஸ், பேப்பர் மில்ஸ் சாலை, பெரவள்ளூர் சதுக்கம், எஸ்ஆர்பி கோயில் தெரு, ஜவஹர் நகர், கே.சி.கார்டன், ராமமூர்த்தி காலனி, சக்திவேல் நகர், பாலாஜி நகர், குமரன் நகர், வெற்றி நகர், காமராஜர் நகர், காந்தி நகர் ஆகிய இடங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 18.05.2011 அன்று 51, 52, 53 ஆகிய வட்டங்களில் நன்றி தெரிவிக்க உள்ளார்.

No comments:

Post a Comment