கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, May 27, 2011

திகாரில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு


திமுக தலைவர் கலைஞர் 23.05.2011 அன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழியனுப்பு வைத்தனர்.

கலைஞருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் சென்றனர்.

மாலையில் கருணாநிதி, அவரது மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா மற்றும் திமுக எம்.பி.க்கள் திகார் சிறைக்கு சென்றனர். கனிமொழியை கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். சிறையின் துணை கண்காணிப்பாளர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு பற்றி திகார் சிறை டைரக்டர் ஜெனரல் நீரஜ் குமார், நிருபர்களிடம் கூறுகையில், ‘கனிமொழியுடன் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பை நாங்கள் கண்காணிக்கவில்லை’ என்றார்.
பின்னர், அங்கிருந்து கருணாநிதி, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.
முன்னதாக, டெல்லியில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் கனிமொழியை போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் கனிமொழியை சந்தித்து பேசினர்.

காந்தி நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கனிமொழி நேராக அவரிடம் சென்றார். இருவரும் தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சிறிதுநேரத்தில் காந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.

எனினும் கனிமொழி உணர்வுகளை கட்டுப்படுத்தியவராக காந்தியிடம் பேசினார்.

இருவரும் நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு சென்றனர். அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அவரது பேரன் ஆதித்யாவுடன் அமர்ந்திருந்தார்.

பின்னர் கனிமொழிக்கும், ராசாத்தி அம்மாளுக்கும் இடையே காந்தி அமர்ந்தார். சிறிதுநேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி சார்பில் 23.05.2011 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக உறவில் பாதிப்பு இல்லை - காங். :

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி 23.05.2011 அன்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,

‘’காங்கிரசுக்கும், தி.மு.கழகத்துக்கும் இருந்து வரும் உறவில் பாதிப்பு ஏதும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால்,

அவர் சோனியா காந்தியை சந்திக்க வில்லை, காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கருணாநிதி சந்திக்க வில்லை என்பதை பெரிது படுத்த தேவை இல்லை. இதனால் தி.மு.க-காங்கிரஸ் உறவு பாதிக்கபடும் என்று கூறுவதும் தவறு’’ என்று கூறினார்.



No comments:

Post a Comment