கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 5, 2011

ஏன் நடவடிக்கை இல்லை?


தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று பலமுறை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், “ தி.மு.க.வினர் பணம் கொடுப்பார்கள், வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்குகளைப் போடுங்கள் ” என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் திரும்பத் திரும்பக் கூட்டங்களில் பேசினார்கள். அவர்களின் பேச்சுகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாயின.

“ பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு 5 ரூபாயை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து, கோயில் உண்டியலில் போட்டுவிட்டு, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் ” என்று, ‘ சிறந்த பகுத்தறிவுக் கருத்தை ’ மேடையில் பேசினார் சீமான். அவர் பேச்சை ஜெயா தொலைக்காட்சி திரும்பத் திரும்பக் காட்டியது.

பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். பணம் வாங்கத் தூண்டுவது மட்டும் குற்றமில்லையோ? தேர்தல் ஆணையம் என் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

நன்றி : கருஞ்சட்டைதமிழர்

No comments:

Post a Comment