![](http://1.bp.blogspot.com/-jBK8N-l45Bk/Tf3XwCeZwAI/AAAAAAAAEM4/lvl_rZjyr14/s400/S1.jpg)
தேர்தல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட திமுக நிர்வாகி ஆனந்தராஜின் குடும்பத்தினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூர் மாநகர திமுக 22வார்டு அவைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ஆனந்தராஜ். இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுககூட்டணி அடைந்த தோல்வியால் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த மாதம் ஆனந்தராஜ் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மேயர் செல்வராஜ் ஆகியோருக்கு தனித்தனியே இரு கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், 19.06.2011 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருப்பூர் வந்த முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்கொலை செய்து கொண்ட ஆனந்தராஜின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது திருஉருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், ஆனந்தராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி மேயர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர் டி.கே.டி.நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment