கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, June 26, 2011

திமுக ஆட்சியில் செய்தது போல டீசல் வரி குறைப்பு - சிலிண்டருக்கு மானியம் : தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 26.06.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை 50 ரூபாய் உயர்த்தியும், டீசல் விலையினை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியும், மண்ணெண்ணெய் விலை யினை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியும் அறிவித் துள்ளதன் காரணமாக ஏழை-எளிய, மத்திய தர வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

விலைவாசி உயர்வினால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ப தற்காகத்தான் தி. மு.க. 2005-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் பொறுப்பேற்ற அன்றே, அரிசியின் விற்பனை விலையை கிலோ ரூ.3.50-லிருந்து கிலோ இரண்டு ரூபாயாக குறைத்தும், 2008-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் விலையை மேலும் குறைத்து ஒரு கிலோ ஒரு ரூபாய் என்று விலை நிர்ணயித்தும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியது.

விலைவாசியின் கொடுமை ஏழை-எளிய மக்களை பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் 2007-ம் ஆண்டு முதல் தி.மு.க. ஆட்சியில் குறைந்த விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, பாமாயில் போன்ற பொருள்களை வழங்கியதோடு, அதைத் தொடர்ந்து பத்து மளிகை பொருள்கள் 50 ரூபாய் என மானிய விலையிலேயே வழங்கும் திட்டத்தையும் தொடங்கி நடத்தி வந்தது.

காய்கறிகளின் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு கடைகளில் நியாயமான விலையில் விற்பதற்கான ஏற்பாடுகளை கழக ஆட்சியிலே செய்தோம். இவைகள் எல்லாம் ஒரேயடியாக விலைவாசி உயர்விலிருந்து சாதாரண மக்களைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், விலைவாசி என்னும் வெள்ளம் மக்களை ஒரேயடியாக இழுத்துச் சென்று விடாமல் தடுத்துக் காப்பாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

மத்திய அரசு டீசல் விலை, கியாஸ் விலையை உயர்த்துவதின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தி.மு.கழகம் தமிழகத்திலே ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது இரண்டு முறை டீசல் மீதான விற்பனை வரியை குறைத்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினைக் குறைக்கும் வகையில் மானியமளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது கூட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு 50 ரூபாய் என்பதை 34 ரூபாயாக குறைத்து, அதன்மூலம் சிலிண்டர் ஒன்றுக்கு 16 ரூபாய் மானியம் அளிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பு மற்ற மாநில அரசுகளுக்கெல்லாம் வழிகாட்டக் கூடிய ஒன்றாகும். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையிலே மேற்கு வங்க அரசை பின்பற்றி தற்போது மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வில் இருந்து மக்களை மீட்க மாநில அரசுக்கு கிடைக்கும் விற்பனை வரியை முன்பு தி.மு.க. அரசு குறைத்துக் கொண்டது போல இப்போதும் குறைத்து அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசும், ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினை வரும்போது ஏதோ சமாதானம் சொல்லி, பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வினை நியாயப் படுத்துவதோடு விட்டு விடாமல் நாட்டு மக்களை- குறிப்பாக நடுத்தர வகுப்பினர், வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள ஏழை- எளியோரை பெரிதும் பாதிக்கக்கூடிய இந்த பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு முன் வருவதுதான் அதன் தலையாயக் கடமையாக இருக்க முடியும் என்பதையும் வலியுறுத்திட விரும்புகிறேன்’’

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment