கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 8, 2011

இன்ஜி. கல்லூரி இணைப்பு : திமுக மாணவர் அணி கடும் கண்டனம்


திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை:
மாணவர்களின் நலனை பாதிக்கின்ற விதமாக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதாக கூறி, ரூ.210 கோடியை பாழாக்கியது. தொடர்ந்து 400 பொறியியல் கல்லூரிகளை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பதாக கூறியுள்ளது. இது கண்டிக்கதக்கது.
இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவன் கூட சிறு பணிகளுக்காக சென்னைக்கு வர வேண்டும். இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிரமம். இதனால் பல்கலைக்கழக பணிகளும் கூடுதலாகி, நிர்வாக பளு ஏற்படும். பணியில் தாமதமும் ஏற்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment