கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 11, 2011

கலைஞர் அறக்கட்டளை மூலம் 32 பேருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் நிதியுதவி


மருத்துவம் மற்றும் கல்விக்காக ரூ.3 லட்சம் உதவி தொகையினை கருணாநிதி 11.06.2011 அன்று வழங்கினர்.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் கிடைக்கப்பெறும் வட்டி தொகையினை கொண்டு மாதந்தோறும் ஏழை, எளிய, நலிந்தோர் உதவி தொகை 2005ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், ரூ.1 கோடியினை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்&பதிப்பாளர் சங்கத்திற்கு 2007ம் ஆண்டு கருணாநிதி வழங்கினார்.
இதில் மீதமுள்ள ரூ.4 கோடியில் வரும் வட்டி தொகையின் மூலம் 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்பட்டுவருகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.2 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரம். மேலும் 2011 மே மாதம் வட்டியாக மொத்தம் ரூ.3,20,000 கிடைத்தது. இந்த தொகையை மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு 11.06.2011 அன்று கருணாநிதி வழங்கினார். இந்த பணத்தை வெளி மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வந்து போகும் செலவை தவிர்க்க தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment