கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 30, 2011

பொது கணக்கு குழுவில் விவாதம் நடந்தது என்ன? - திமுக எம்பி விளக்கம்


பொது கணக்கு குழு விவாதம் குறித்து, திமுக எம்பி ஆதிசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் பொது கணக்கு குழு கூட்டம், நேற்று முன்தினம் (28ம் தேதி) நடந்தது. அதில் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, 2ஜி அலைவரிசை சம்பந்தப்பட்ட மாதிரி வரைவு அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்ய முயற்சி செய்தார். அதை, திமுக&காங்கிரஸ் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆட்சேபணை செய்தோம். ஏற்கனவே, பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட அறிக்கையை, புதிய குழுவில் தாக்கல் செய்யக்கூடாதென கூறினோம். நான், அது சம்பந்தமான விவாதத்தில் பேசும் போது, “புதிய உறுப்பினர்களால் இந்த மாதிரி அறிக்கை இறுதி செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே இந்த மாதிரி அறிக்கை முந்தையக் குழுவில் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றும், என்னை போன்று வேறு சிலர் புதிய உறுப்பினர்களாக உள்ளதால், மாதிரி வரைவு அறிக்கையின் நகல்களை எங்களுக்கு தர வேண்டும்” என்று கூறினேன்.
அதே கருத்தை குழுவில் புதியதாக உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களும் தெரிவித்தனர். எவ்வித முடிவும் எடுக்காமல் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சில ஊடகங்களில் திமுக, காங்கிரஸ் இரண்டும் மாறுபட்ட கருத்தோடு செயல்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. 2ஜி அலைவரிசை சம்பந்தப்பட்ட மத்திய பொது கணக்கு குழு விவாதங்களில், காங்கிரசுடன் திமுக இணைந்து ஒத்த கருத்துடன் செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment