கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

கலைஞர் பிறந்த நாள்: தங்கபாலு வாழ்த்து



திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,


திமுக தலைவர், முன்னாள் முதல்வர் கலைஞர் 88ம் வயதில் அடியெடுத்து வைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இளம்வயது முதலே அவர் தமிழாற்றல் பெற்று சிறந்து உயர்ந்தவர். தமிழகம், தமிழர்கள் முன்னேற்றம் என்ற கொள்கைகளை ஏற்று அதற்கெனவே உழைத்து வருபவர்.


ஐந்து முறை முதல்வர் என்றும், 12 முறை எம்எல்ஏ என்றும் வரலாற்றுப் பெருமை பெற்றவர் மட்டுமல்ல இலக்கியம், எழுத்து, பேச்சு, அரசியல், கலை, சமுதாயம் போன்று தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு முத்திரையைப் பதித்தவர் கலைஞர்.


வெற்றியில் வெறிகொண்டும், தோல்வியில் துவண்டும் போகிற பலவீனம் கொண்டவர் அல்ல அவர். எதையும் தாங்கி, செயல்பட்டு அடுத்த வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் ஆற்றல் மிகப் பெற்றவர்.

அத்தகைய புகழுக்குரியவர் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்ந்து தமிழ், தமிழகம், தமிழர்க்கு உழைத்திட அவரது 88 வது வயதில் மனமுவந்து வாழ்த்துவதாக தங்கபாலு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment