கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, June 26, 2011

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : அரசு வக்கீலுக்கு தெரியாமல் மனு - டி.எஸ்.பி.க்கு நீதிபதி கண்டனம்


ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்த போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டித்து, விசாரணையை ஜூலை 8க்கு ஒத்திவைத்தது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டன.


அதில் உள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு சார்பில் கோரப்பட்டது. அதன் பேரில் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் திருத்தப்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்த நிலையில், சாட்சியாளர்களில் ஒருவரிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்தரப்பு சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அந்த மனுவை தனிக்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து எதிர்தரப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரித்த குழுவில் இடம் பெற்றுள்ள டி.எஸ்.பி. சம்பந்தம் கடந்த 15ம் தேதி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்கும்படி மனுவில் கோரினார்.
அரசு வழக்கறிஞரிடம் கூட சொல்லாமல், நேரடியாக அவரே இந்த மனுவை தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மனுவை விசாரணைக்கு ஏற்பது பற்றி ஜூன் 23ம் தேதி கூறுவதாக நீதிபதி மல்லிகார்ஜுனா தெரிவித்திருந்தார்.
அதன்படி, 23.06.2011 அன்று மனுவை விசாரித்த நீதிபதி, நேரடியாக மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கோரிய சம்பந்தத்தை கண்டித்தார். மனுவையும் நிராகரித்தார். ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், �இந்த வழக்கில் இதுவரை ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டதால் நான் ஆஜராகிறேன். எனவே, இந்த வழக்கின் நிலை குறித்து தெரிந்து கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்� என்று கோரினார். அதற்கு அரசு வழக்கறிஞர் சந்தேஷ் கவுடா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment