கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 8, 2011

சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும் : கலைஞர்



திமுக அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரத்தின் மகன் டாக்டர் கதிரவன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் ரோகிணி திருமண விழா 08.06.2011 அன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
கழகத்தின் அமைப் புச் செயலாளர் கல் யாணசுந்தரம், திருமதி திலகா ஆகியோரின் அன்பு மகன் டாக்டர் கதிரவன் அவர்களுக்கும், ஈரோடு டாக்டர் இ.கே.சகாதே வன் - டாக்டர் உஷா ஆகியோரின் அன்பு மகள் டாக்டர் ரோகிணி அவர்களுக்கும் இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கின்றது. நாமும் நம்முடைய மன மகிழ்ச்சியைத் தெரிவித்து அவர்களை வாழ்த்தியிருக்கிறோம்.


திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதென்றால், மாநாடுகளை போட்டு அல்ல; பெரிய பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி அல்ல; ஆட்சிப் பொறுப்பிலே அரும்பெரும் காரியங்களை நடத்தி, அவைகளையெல்லாம் விழாக்களாக கொண்டாடி மட்டும் அல்ல; தி.மு.கழகத்தின் வளர்ச்சி ஆரம்ப காலத்திலேயிருந்து இதுவரையிலே மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக நடைபெற்றிருக்கின்றது என்றால் அதற்கு காரணம், நாம் தொடர்ந்து ஆற்றி வருகின்ற கொள்கைப் பிரச்சாரம், சமுதாய எழுச்சிப் பிரச்சாரம், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், நடுத்தர மக்கள், சிறுபான்மை மக்கள் இவர்கள் எல்லாம் தமிழகத்தில் நல்வாழ்வு பெற வேண்டுமென்பதற்காக சூளுரைத்து இன்று வரையிலே தொடர்ந்து அந்தப் பணியினை ஆற்றி வருகின்ற காரணத்தினாலேதான்.
தோல்வி நமக்கு ஒரு தடைக்கல் அல்ல. இந்தியாவினுடைய இளந்தலைவர் ராஜிவ்காந்தி மறைவுற்றபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பொய்ப் பழி சுமத்தி, மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த பிரச்சாரத்தின் காரணமாக நாம் மக்களுடைய ஆதரவை பெருவாரியாக இழந்தோம். அந்த கால கட்டத்தில் நான் மாத்திரம் துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆள் வெற்றி பெற்றேன். ஒரே ஒரு தொகுதியில் தான் நாம் வெற்றி பெற முடிந்தது. அதற்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் பல இடங்களிலே வெற்றி பெற்று, இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்ற இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பெருமைப் பெற்று, ஆட்சி நடத்தியதை யாரும் மறந்து விட இயலாது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் சூரியன் மறைந்தது மறைந்ததுதான் அஸ்தமனமானது அஸ்தமனமானது தான், இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறார். சின்னப்பிள்ளை ஒன்றை கூப்பிட்டு, இன்றைக்கு சூரியன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். ஒரு குழந்தைக்கு தெரிந்த ரகசியம் கூட குவலயத்தை ஆளுவதாக சொல்லிக் கொள்ளும் கோதைகளுக்கு தெரியாதது ஆச்சரியம் தான். எனவே பகலும், இருளும் மாறிமாறி வருவதை போல வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்துக்கு மாறிமாறி வருவது இயல்பு தான். இந்த கழகத்துக்கு நீதிக் கட்சி என்ற பெயர் இருந்தபோது, எவ்வளவு பெரிய தோல்விகளையெல்லாம் இது சந்தித்தது என்பதை தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
அதற்கு பிறகும்கூட, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் நாம் போட்டியிட்டபோது, முதலில் 15 இடங்களில் தான் வென்றோம், பிறகு 50 இடங்கள், அதற்கு பிறகு ஆட்சிப் பொறுப்பு என்ற அளவுக்கு படிப்படியாகத் தான் வளர்ந்தோம். ஆகவே, படிப்படியாக வளர்ந்து தமிழ்நாட்டு மக்களை படிப்படியாக முன்னேற்றுகின்ற பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த கழகத்தை அவ்வளவு சுலபத்திலே யாரும் புறம் தள்ளி விட முடியாது. யாரும் வெற்றி கொள்ள முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு இயக்கமல்ல, ஒரு கட்சியல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு இன உணர்வின் அடையாளம். அந்த இன உணர்வை அழித்துவிட்டு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தை நாங்கள் தோற்கடிப்போம் என்று யாராவது சொன்னால், அவர்களை பைத்தியக்காரர்களின் பட்டியலிலே தான் வைக்க வேண்டுமே தவிர, வேறெங்கும் எதுவும் சொல்ல இயலாது.
கழகம் இன்றைக்கு தோல்வியை சந்தித்திருக்கிறது என்றாலும், சமுதாயத் துறையில் பெற்றிருக்கின்ற வெற்றி சாதாரணமானதல்ல. பல பல வெற்றிகளை திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாயத் துறையிலே பெற்றிருக்கின்றது, அப்படிப்பட்ட வெற்றிகளிலே ஒன்று தான் இந்தத் திருமண வெற்றி.

திருமணத்தை நம் முடைய தம்பி கல்யாண சுந்தரம் அவர்கள், அவ ருடைய இல்லத்திலே இவ்வளவு சிறப்பாக நடத்துகிறார், இவ்வளவு பேர் இந்த மண விழா விற்கு வந்திருக்கிறோம் என்றால், இது திரும ணம் மூலமாகவும் நம் முடைய கழகத்தின் கொள்கைகளைப் பரப் புவதற்குக் கிடைத்திருக் கின்ற வெற்றி என்பதை யாரும் மறுக்க முடி யாது. தலைமைக் கழ கத்திலே பாடுபடுகின்ற தம்பிகளில் கல்யாண சுந்தரம் தலைசிறந்தவர்.

அப்படிப்பட்ட தம்பி யின் இல்லத்தில் நடை பெறுகின்ற இந்த மண விழாவிலே கலந்துகொள் வதிலும் மணமக்களை வாழ்த்துவதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மன நிறைவடைந்து இந்த அளவோடு வாழ்க மண மக்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.


இவ்வாறு கருணாநிதி பேசினார்.


தயாநிதி மாறனே சி.பி.ஐ. விசாரணையை சந்திப்பார் - கலைஞர் :

திமுக தலைவர் கலைஞர் இவ்விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களூக்கு பேட்டியளித்தார்.

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?

அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?

தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.


சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது. அடுத்து சந்தனம் மணக்கும் - கலைஞர் :

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்கு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்துள்ளார்.


கேள்வி: கனிமொழி மீதான தீர்ப்பு இன்று (08.06.2011) வரவிருக்கின்ற நிலையில் - உங்களுடைய தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


பதில்: அமைதியாக இருங்கள் - சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது. அடுத்து சந்தனம் மணக்கும். அதுவரையில் பொறுத்திருங்கள்.


கேள்வி: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா மேலவை என்பது இனி வராது என்று சொன்னதோட அஸ்தமித்த சூரியன் இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறாரே?


பதில்: சூரியனுக்கு நிரந்தரமாக அஸ்தமனம் கிடையாது. அவர் சும்மா சொல்லியிருப்பார்.


கேள்வி: மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைப் பற்றி ஏடுகளில் எல்லாம் செய்தி வந்துள்ளதே?


பதில்: அதைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியாது,


இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.


No comments:

Post a Comment