கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 29, 2011

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை


திமுக தலைமைக்கழகம் 28.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
குவிந்திடும் கட்சி பணிகளை சிறப்பாக ஆற்றிடவும், அவற்றிற்கேற்ப கட்சி சட்ட திட்டங்களில் உரிய தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்களை பொதுக்குழுவின் அனுமதி பெற்று செய்திடவும் தலைமைக் கழகத்தின் சார்பில் சில கருத்துகளுக்கான சட்ட திட்டங்களை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை மனதில் கொண்டு, கருத்துரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தங்கள் கருத்துக்களை பொதுக் குழு உறுப்பினர்கள், ஜூலை 15ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழகத்தின் கருத்து: தற்போதுள்ள மாவட்ட கழகத்திற்கு பதிலாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும், நாடாளுமன்ற தொகுதி குழுக்கள் தனித்தனியாக இயங்கும். அவற்றின் கீழ் சட்டமன்ற தொகுதிக் குழுக்கள் பணியாற்றும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment