கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 11, 2011

சட்டசபையை 10.06.2011 அன்றும் புறக்கணித்தது திமுக


சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் 10.06.2011 அன்று வந்தனர். ஆனால் சட்டசபைக்குள் செல்லாமல் அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.

அதன் பின்னர் வெளியே வந்த எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு ஆட்சியின் கொள்கை பற்றி சொல்வதுதான் ஆளுநர் உரை. அதிலுள்ள தடுமாற்றங்கள், பல்வேறு திட்டங்கள் ரத்து போன்றவற்றை சுட்டிக்காட்ட முன்வந்தோம். ஆனால் ஒரு வார காலமாக ஜனநாயக கடமையாற்ற எங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திமுக எம்எல்ஏக்களுக்கென உரிய இருக்கைகள் ஒதுக்கி தரப்படவில்லை. இதுசம்பந்தமாக கடந்த இரு நாட்களாக சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கடிதம் மூலமாக புகார் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக இன்று அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.
09.06.2011 அன்று திமுக உறுப்பினர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படாததால் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment