கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 23, 2011

லோக்பால் மசோதா திமுக நிலை என்ன? - கலைஞர்


திமுக ஆட்சியில் லோக்பால் போன்ற ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இதுதான் லோக்பால் மசோதா குறித்த திமுகவின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதி 22.06.2011 அன்று தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி எம்பியை சந்திக்க டெல்லி சென்றிருந்தார். கனிமொழியை சந்தித்து விட்டு, 22.06.2011 அன்று இரவு சென்னை திரும்பினார்.
அவருடன் மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஜெகத்ராட்சன், கருணாநிதியின் துணைவி ராசாத்தியம்மாள், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோர் வந்தனர். கலைஞரை விமான நிலையத்தில் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
டெல்லியில் கனிமொழியைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்?
திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், அவர்களுடைய பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான்.
அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார் மற்றும் ராஜா போன் றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச் சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.
கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்?
அதைப் பற்றித்தான் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து கொண்டிருக்கிறேன்.
கனிமொழியின் நிலையைப் பார்க்கும்போது, ஊடகங்களைத் தவிர்த்து அதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கேட்பவர்கள் கூட காரணமாக இருக்கலாம்.
“லோக்பால்” மசோதா பற்றி திமுகவின் நிலைப்பாடு என்ன?
ஏற்கனவே திமுக ஆட்சியில் இதுபோன்ற ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம். அதுதான் திமுகவின் நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதலமைச்சரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உங்களுடைய கருத்தா?
உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதலமைச்சரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?
பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன். தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறு கின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது.
புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பாக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது பற்றி?
எந்த அடிப்படையில் விசாரணைக் கமிஷனை அமைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வந்த பிறகு சொல்கிறேன்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் எப்போது?
ஜூலையில் நடக்கும். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்குமா?
எனக்குத் தெரியாது.
காங்கிரசுக்கும் & திமுகவுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?
நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் உள்ள உறவு நாங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் உள்ளது என்று சொன்னீர்கள். அப்படியென்றால் பிரச்னை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
எந்தப் பிரச்னையும் இல்லை.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?
யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி தான் நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகார பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.

No comments:

Post a Comment