கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

கேகே நகர் பகுதி திமுக செயலாளர் கவுன்சிலர் தனசேகரன் கைது


வணிக வளாகத்தை அபகரிக்க முயன்றதாக கேகே நகர் பகுதி திமுக செயலாளர் தனசேகரன் கைது செய்யப்பட்டார்.
வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் ராம் என்பவரின் மனைவி பரமேஸ்வரி. இவர் தனது வீட்டுடன் இணைந்த ரூ.15 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அடமானமாக வைத்து நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.2.50 லட்சம் கடனாக வாங்கினார். பின்னர் கடனை அவர் ஒழுங்காக செலுத்த முடியாததால் பரமேஸ்வரிக்கும் அந்த நிதி நிறுவனத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் நிதி நிறுவனம் அந்த வணிக வளாகத்தை வேறு நபருக்கு ஏலத்தில் விட்டது. இதனால் பரமேஸ்வரி கோர்ட்டில் நிதி நிறுவனம் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்துக்கு ஆதரவாக கே.கே.நகர் பகுதி திமுக செயலாளரும், கவுன்சிலருமான தனசேகரன் சில ரவுடிகளை வைத்து பரமேஸ்வரியை மிரட்டி வணிக வளாகத்தை அபகரிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன பரமேஸ்வரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம்தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதையடுத்து பரமேஸ்வரி மீண்டும் கடந்த மாதம் 3ம்தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
நில அபகரிக்க முயன்றதாக கடந்த மாதம் 8ம்தேதி தனசேகரன் கூட்டாளிகள் முருகேசன், கோவிந்தராஜன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கேகே நகர் 12வது செக்டார் பகுதியில் உள்ள வீட்டில் தனசேகரனை 06.09.2011 அன்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கில் முன் ஜாமீன் :
இதற்கிடையில் கோவை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நிதி மோசடி வழக்கில், கே.கே. நகர் தனசேகரனை தேடி வந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தனசேகரன் மனு தாக்கல் செய்தார். அதில், �நான் நிரபராதி. போலீசார் உள் நோக்கத்துடன் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே முன் ஜாமின் தரவேண்டும்� என கூறியிருந்தார். வழக்கை நீதிபதி வாசுகி 06.09.2011 அன்று விசாரித்து, மனுதாரர் தனசேகரனுக்கு வரும் 9ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment