கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

மருத்துவம், கல்வி உதவி நிதி : 32 பேருக்கு க்ஷீ 3.20 லட்சம் கருணாநிதி வழங்கினார்


கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக, க்ஷீ 3.20 லட்சத்தை திமுக தலைவர் கருணாநிதி 07.09.2011 அன்று வழங்கினார்.
திமுக தலைமைக்கழகம் 07.09.2011 அன்று இரவு வெளியிட்ட அறிக்கை:

அறக்கட்டளைக்காக திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த க்ஷீ 5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோர்க்கு உதவித்தொகை 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.
30வது புத்தக கண்காட்சியை 2007 ஜனவரி 10ம் தேதி திறந்து வைத்து பேசிய கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு க்ஷீ 1 கோடி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள க்ஷீ 4 கோடியில் இருந்து வரும் வட்டித் தொகையில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை க்ஷீ 2 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆகஸ்ட் மாதம் வட்டியாக கிடைத்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை, மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 32 பேருக்கு கருணாநிதி 07.09.2011 அன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக, தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment