கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

அதிமுக அரசின் பழிவாங்கும் போக்கை கவர்னர் தடுத்து நிறுத்த வேண்டும் : திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு


பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் அதிமுக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, கவர்னர் ரோசய்யாவை சந்தித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு தந்தனர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஜெ.அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா, கோவி. செழியன், அன்பழகன் உள்ளிட்ட 19 பேர், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரோசய்யாவை 07.09.2011 அன்று சந்தித்துப் பேசினர். காலை 10.45 மணி முதல் 11.15 மணி வரை சந்திப்பு நடந்தது. அப்போது, அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை மனு தந்தனர்.
மனுவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூறியிருப்பதாவது:
புதிதாக தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஏற்கனவே உங்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததை நினைவு கூர்கிறோம். எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
2006 முதல் 2011 வரையில் ஆவணங்களில் முறைகேடு செய்து நிலங்களின் உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபகரித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அந்த நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெயலலிதா தலைமையிலான மாநில அதிமுக நிர்வாகம் பொது அறிவிப்பு செய்தது.
திமுகவினருக்கு எதிரான புகார்களுக்கு முக்கிய முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில அரசு காவல் துறைக்கு ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளது.
இதுவரை, நில அபகரிப்பு புகார்களில் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் 90 திமுக நிர்வாகிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக இருந்தவரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி, 10 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்தவரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு, ஈரோடு மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு, அவர் இடைக்கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மணி, அன்பில் பெரியசாமி, ரங்கநாதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தென்சென்னை மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன், லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் ஆகியோரும் உள்ளனர்.
வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டமான குண்டர்கள் சட்டம் திமுகவின் 11 நிர்வாகிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.
திமுக மீது காவல்துறை பாரபட்சமான முன் விரோத அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சியினுடைய பல கோட்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டு மாநிலத்தில் ஒரு போலீஸ் ராஜ்யம் நடைபெறுகிறது.
பலர் இத்தகைய பொய் புகார்கள் இல்லாமல்கூட கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு புகார்கள் புனையப்படுகின்றன. இது, மனித உரிமை மீறலும், உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான உத்தரவுகளுக்கு மாறானதுமாகும்.
சேடப்பட்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ தளபதி, விசாரணைக்கு வந்தபோது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், முற்றிலும் மாறுபட்ட புகாரின் அடிப் படையில் அவரும் இதர சில திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட் டனர்.
திமுக நிர்வாகிகள் முறையான கைது மெமோ இன்றி கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேட் முன்பு முறையான ஆவணங்களின்றி நிறுத்தப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எந்த கைது மெமோ, ரிமாண்ட் மெமோவும் இல்லாமல் கைது செய்யப்பட்ட முறையான ஆவணங்களின்றி நீதிமன்றத் துக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழகாட்டும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் அவர்கள் எல்லையில் உள்ள சிறைகளில் இல்லாமல், வேண்டுமென்றே அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதொலைவிலுள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
அதிமுகவைச் சேர்ந்த காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிபட்டி, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பி என்.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் மீதும், மேலும் பல அதிமுக நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் அளிக்கப்பட்டும், சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கி, அவர்களுக்கு எதிரான புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த மூர்த்தி என்பவரால் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி சட்ட ரீதியான ஆலோசனையைப் பெற முயலுவதாக கூறினார். இதற்கிடையில், மற்றொரு மூத்த அமைச்சர் புகார்தாரரை அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
காரைக்குடி தொகுதி எம்எல்ஏ சோழன் பழனிச்சாமி மீதான நில அபகரிப்பு புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் புகார்தாரர் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு சென்றுள்ளார்.
பெரும்பாலான நில அபகரிப்பு வழக்குகள் அடிப்படையில் சிவில் தன்மை கொண்டவை என்பதால், சிவில் நீதிமன்றங்கள் மட்டுமே அத்தகைய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் படைத்தவையாகும். உண்மையான சிவில் பரிவர்த்தனைகள் கிரிமினல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.
மூத்த அரசியல் தலைவரான நீங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல், நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவர். எனவே, இந்த பிரச்னையில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்குவீர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில் திமுக தலைவர் கருணாநிதி, சக்கரபாணி, மைதீன்கான், பெரிய கருப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment