கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

பேரவையில் இருந்து 2வது நாளாக திருக்குறளை கேட்டுவிட்டு திமுகவினர் வெளிநடப்பு


சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 08.08.2011 அன்று 2வது நாளாக திருக்குறளை மட்டும் கேட்டு விட்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சட்டப்பேரவை 08.08.2011 அன்று காலை 10 மணிக்கு கூடியது. பேரவை தலைவர் ஜெயக்குமார், திருக்குறள் ஒன்றை வாசித்து அதற்கு விளக்கம் சொன்னார். அதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அவையில் இருந்து வெளியேறினர்.
பேரவைக்கு வெளியே எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், �சட்டப்பேரவையில் எங்கள் குரல் ஒலிக்க வழியில்லை. அதனால் திருக்குறள் ஒலித்தது. அதை கேட்டோம். குறளின் பொருள் நன்றாக இருந்தது. அதனால், எங்கள் பணியை முடித்து விட்டு புறப்பட்டோம்” என்றார். 08.08.2011 அன்றும் திருக்குறளை மட்டும் கேட்டுவிட்டு, அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

No comments:

Post a Comment