கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 4, 2011

10ம் தேதி தி.மு.க., சட்டப்பிரிவு கூட்டம்


திமுக வக்கீல்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 10ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
இதுகுறித்து திமுக சட்டத்துறை செயலாளர் பாரதி 02.09.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்றுபவர்களை முடக்கி போடவும், வாக்காளர்களை அச்சமூட்டவும் அதிமுக ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். காவல் துறையினர் துணையோடு சட்டத்துக்கு முரணான அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிமுக ஈடுபட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், சட்டரீதியான வழிமுறைகளில் நீதிமன்றங்களை நாடி உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், அதற்கு வழிமுறை காணவும் சட்டத்துறை பிரிவினரின் கூட்டம் வரும் 10ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் திமுக வக்கீல்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பாரதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment