கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 11, 2010

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்வு : கலைஞரிடம் ராம.நாராயணன் வாழ்த்து


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் தியேட்டரில் இன்று நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்தினார். காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தியேட்டர் முன்னால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினார்கள். இந்த தேர்தலில் ராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.ஜி. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.


ராமநாராயணன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரது அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், முரளிதரன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காஜாமைதீனும் போட்டியிட்டனர். இதே அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிட்டார்.

கே.ஆர்.ஜி. தலைவராக போட்டியிட்ட அணியில் ராம கோட்டை குமார் துணை தலைவர் பதவிக்கும், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.எல். தேனப்பன் ஆகியோர் செயலாளர்கள் பதவிக்கும், பாபுகணேஷ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 40 பேர் போட்டியிட்டனர்.


மாலை 4.30 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவுகள் எண்ணப்பட்டன.


தேர்தலில் ராமநாராயணன் அணி வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமநாராயணன் 441 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.ஆர்.ஜி.க்கு 147 ஓட்டுகள் கிடைத்தன. ராமநாராயணன் அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட சிவசக்தி பாண்டியன், சிவசக்தி பாண்டியன் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட காஜாமைதீன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

11.07.2010 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக வெற்றிபெற்ற இராமநாராயணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், அன்பாலயா பிரபாகரன் மற்றும் கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.காஜாமைதீன் ஆகியோரும் வாழ்த்து பெற்றனர். உடன் இயக்குநர் அமிர்தம் மற்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளனர்.



No comments:

Post a Comment