கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 28, 2010

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் 7 செம்மொழிகளுக்கு தனி ஆய்வு துறை


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ரூ.1.95 கோடி செலவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் உலக செம்மொழி உயராய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, மையத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும¢ என்ற 100 ஆண்டுகால நமது கோரிக்கை 2004ல் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘தமிழ் செம்மொழி அந்தஸ்துபெற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் காரணமாக இருந்தாலும், அது கிடைக்கப்பெற்றதில் உங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதத்தை நான் சாதாரணமாக நினைக்கவில்லை. எனது பேரன், பேத்திகள் பாதுகாத்து வைக்கவேண்டிய செப்பேடாக கருதுகிறேன். அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த புகழ்பெற்ற சின்னமாக அக்கடிதம் இருந்தது.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றவுடன், மைசூரில் உள்ள தமிழ் ஆய்வு மையத்தை சென்னைக்கு மாற்றக் கோரிக்கை வைத்தோம். அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. உலக செம்மொழிகள் குறித்த ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். அதுவும் தற்போது நிறைவேற்றப்பட்டு 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொழி வாரியான பல்கலைக்கழகங்களில் அந்தந்த மொழிகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்மொழி மட்டும் அல்லாது செம்மொழி அந்தஸ்து பெற்ற வடமொழியான சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், அரபு ஆகிய 7 மொழிகளுக்கும் சேர்த்து எந்த ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை. உலகிலேயே தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தான் உலக செம்மொழிகள் உயராய்வு மையம் முதன்முறையாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, உலக செம்மொழிகள்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். செம¢மொழிகள் கற்பித்தல், மொழி அமைப்புகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக செம்மொழிகளுக்குள் ஒப்பீடு, ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் குறித்தும் உலக செம்மொழி களஞ்சியங்கள், வரலாற்றுக் களஞ்சியம் ஆகியவை உருவாக்கப்படும். மேலும், செம்மொழிகளைக்கொண்ட பொன்மொழிக் களஞ்சியம், உலக செம்மொழி அகராதியும் உருவாக்கத் திட்டமிடப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர்கள் கோ.சி.மணி, பொன்முடி, துணைவேந்தர¢ ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. வாங்க அன்பு உடன்பிறப்பே! கலக்குங்க! என் அன்பான வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete