கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 28, 2010

ஜெ.வுக்கு பொன்முடி விட்ட எச்சரிக்கை


தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி,

இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று மாலை ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

துணை முதல்வர் ஸ்டாலின், 4ஆம் தேதி நடக்க இருக்கும் இளைஞரணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் ஒரு பட்டத்தை கொடுத்திருக்கிறார். 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறேன் என்று அறிவித்தவுடனேயே, அலறிக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார் ஜெயலலிதா.


அறிக்கை விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, அரசியல் ரீதியாக இந்த கழகத்தைப் பற்றியோ, கலைஞரைப் பற்றியோ, தளபதி ஸ்டாலின் பற்றியோ விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.


ஆனால் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞருடைய குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று பழக்கப்பட்டிருந்தாலும் கூட, அண்ணன் வெற்றிகொண்டான் பானியில் பதில் சொன்னால்தான் ஜெயலலிதாவுக்கு புரியும்.


வெற்றிக்கொண்டான் பானியில் சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா, தனக்கு எப்போதும் ஜால்ரா அடித்துக்கொண்டிருப்பவர்களை ஆட்டிப்படைத்து, அரசியல் செய்துகொண்டிக்கும் ஜெயலலிதா, இன்று நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை என்றவுடன், நமக்கு என்ன கதி என்று கதிகலங்கி இருக்கிறார்.


ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா, இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிக் காரர்கள் சொன்னார்களே ஜெயலலிதா ஆட்சியிலே எலி கறி திண்றார்கள் என்று. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, கலைஞரை பார்த்து ஏகவசனத்தில் விமர்சனம் செய்யுகிற ஜெயலலிதாவே நாவை அடக்கி வை என்று எச்சரிக்கிறோம்.


வருகிறது. தீர்ப்பு காத்திருக்கிறது. பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. காத்திருக்கிறோம். ஜெயலலிதாவே முறையாக அறிக்கை விடு, பதில் சொல்லுகிறோம். வழக்குகளை நேர்மையாக சந்திகக திராணியில்லாத ஜெயலலிதாவே நாவை அடக்கு என்று பேசி முடித்தார்.


No comments:

Post a Comment