கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 28, 2010

திருவாரூர் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் உரை


திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைத்து முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை :

திருவாரூர் விழாக்கோலம் பூண்டிருக்-கின்றது. நடந்து முடிந்த தேரோட்டத் திருவிழாவிற்குப் பிறகு பெரும் விழாவாக இந்த விழா இன்றைக்கு அமைந்திருக்-கின்றது (27.7.2010). (கைதட்டல்)

திருவாரூரிலே இன்றைக்கு நான் காணுகின்ற காட்சி, உள்ளபடியே என்-னுடைய கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி மாத்திரமல்ல, கருத்துக்கு இனிப்பைத் தருகின்ற காட்சி. ஒரு காலத்தில் இந்தத் திரு-வாரூரில் பள்ளிச் சிறுவனாக, தெரு-விலே விளையாடுகின்ற விளையாட்டுப் பிள்ளையாக இருந்து, இங்கிருந்து வளர்ந்து திராவிட இயக்கக் கொள்கை-யிலே என்னை இணைத்துக் கொண்டு பெரியாரின் மாணவனாக, பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக நான் என்னை மாற்றிக்கொண்டு, அவர்கள் வழியிலே நடைபோட்டு, இன்றைய தினம் உங்-களுடைய அன்பால், ஆதரவால் நீங்கள் வழங்கிய கருணையினால், வழங்கிக் கொண்டிருக்கின்ற ஆதரவினால் தமி-ழகத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருக்கிறேன் என்றால், அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். உங்களால் வழங்கப்பட்ட பொறுப்பு, உங்களால் தரப்பட்ட பதவி, உங்களால் இடப்பட்ட வேலை_- அதை நீங்கள் நிறைவடையத்தக்க வகையில், நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் செய்து முடிப்பதுதான் என்னைப் போன்றவர்களுடைய கடமையாக, வேலையாக இருக்க வேண்டும் என்-பதால்தான், அந்தப் பணிகளிலே ஒரு பகுதி-யாக திருவாரூர் மண்ணில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவத் துறை சார்ந்த பல்-வேறு பணிகளும் தொடங்கி அதனுடைய திறப்பு விழாக்கள் இன்றைக்கு நடை-பெற்றிருக்கின்றன.

ரூ.500 கோடிக்கான திட்டம்

தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்-டியதைப்போல், ஏறத்தாழ அய்நூறு கோடி ரூபாய்க்கான பணிகள் இன்னும் நடைபெற இருக்கின்றன என்பது, இந்த வட்டாரத்-திலே உள்ள மக்களுடைய நலனுக்காக நடைபெற இருக்கின்றன என்பது மகிழ்ச்-சியூட்டக்கூடிய செய்தி. இது இந்த மண்-ணுக்கு மாத்திரமல்ல, இந்த மாவட்டத்திற்கு மாத்திரமல்ல. தமிழகம் முழுமைக்கும் பலகோடி ரூபாய் மக்கள் நலனுக்காக, மக்களுடைய பல்வேறு திட்டங்களுக்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காக செல-வழிக்கப்படுகிறது. இந்த மருத்துவத்-துறையை மட்டும் கணக்கில் எடுத்துக்-கொண்டால் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன் _ மக்கள் நல்வாழ்வுத்-துறைக்கு அதாவது சுகாதாரத்-துறைக்கு_- முன்பெல்லாம் சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்ட இந்தத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே மாற்றப்பட்டு, அந்தத் துறையினுடைய உண்மையான குறிக்கோள் என்ன, பொறுப்பு என்ன என்பதை அந்தப் பெயராலேயே விளக்குவதற்காக அந்தப் பெயரை அமைத்துக் கொண்டு ஆட்சி செய்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசில் ஒன்றை மாத்திரம் உங்-க-ளுக்-குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உயிர்காக்கும்
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

இந்தத் துறைக்காக - அதாவது சுகாதாரத்துறை என்று அழைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை என்று மாற்றப்பட்டுள்ள இந்தத் துறைக்கு 2005_2006 ஆம் ஆண்டு கடந்தகால (அ.தி.மு.க.) ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி 1,487 கோடி ரூபாய். இது கடந்த கால ஆட்சியில். ஆனால் 2006 இல் இந்த அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு தமிழக மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த ஆண்டுக்காண்டு நிதி-ஒதுக்கீட்டை அதிகரித்து - கடந்த ஆட்சியில் 1,487 கோடி ரூபாய் என்றிருந்த நிலையை மாற்றி - நடப்-பாண்டில் 3,889 கோடியே 41 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி ஒதுக்கீடு செய்து, (கைதட்டல்) இத்தகைய அரும்பணிகளை ஆற்றிவருகிறது. இப்படி ஆற்றி வருகின்ற அரும்பணி-களிலே ஒன்றாகத்தான், தமிழகத்தில் அனைவரும் கட்சி சார்பில்லாத முறையில், அனைவரும் பாராட்டுகின்ற வகையிலே மக்கள் நல்வாழ்வுத் திட்-டங்களாக, மக்களுடைய உடல் நிலைக்-காக, உடல் நிலையிலே ஏற்படுகின்ற கோளாறுகளைப் போக்குவதற்காக, அவர்களுடைய உயிரைக் காப்பாற்று-வதற்காக நாம் நிறைவேற்றி வருகின்ற திட்டங்கள் அனைத்திலும் சிகரம் வைத்தாற்போல் இருக்கின்ற திட்டம்-தான் உயிர்காக்கும் கலைஞர் காப்-பீட்-டுத் திட்டம். இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 அழைப்பு - இந்த இரண்-டை-யும் யாரும் மறக்க முடியாது. நம்மை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்ற கட்சிக்காரர்கள் ஆனா-லும்கூட, அவர்-களும் மனதுக்குள்-ளேயே பாராட்டிக்-கொண்டுதான் இதை விமர்சிக்க முடியும்.

நான் இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இது ஓர் அரசு விழா, பொது விழா. இதிலே அரசியல் பேச முடியாது. ஆனால் அரசியல் இல்-லாமல் அரசு இல்லை. திரு-வள்ளுவர்_ அரசியல் என்கின்ற ஓர் அதிகாரத்தையே திருக்குறளில் சேர்த்-திருக்கிறார். வள்ளுவருக்கே குறள் எழுத அரசியல் பயன்பட்டது என்றால், வள்ளுவர் வழி நிற்கின்ற நமக்கு அரசியல் கூடாது என்ற பிடிவாதம் கூடாது என்பதால், அரசியலையும் நாம் தயவு செய்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதிலே அரசியல் கூடாது. அரசியல் இல்லை. இங்கே நாம் எல்-லோரும், எல்லாக் கட்சியைச் சேர்ந்த-வர்களும் ஒரே விஷயத்தைத்தான் இங்கே பேசுகிறோம். வெவ்வேறு விஷயங்களைப் பேசவில்லை. வெவ்வேறு கருத்துகளை, முரண்பட்ட கருத்துகளை, எதிர்வாதங்களை இங்கே நாம் செய்யவில்லை. நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும், எங்கள் தொகுதிக்கு_ நன்மை செய்யவேண்-டும், எங்கள் ஊருக்கு நன்மை செய்யவேண்டும் என்று ஒவ்வொரு கட்சிக்காரர்களுக்கும் பேச சுதந்திரம் உண்டு. கருத்துகளைச் சொல்ல_- நாங்-கள் செய்வதில் என்னென்ன தவறு என்பதை இடித்துக்காட்ட எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் சுதந்திரம் உண்டு, உரிமை உண்டு. அந்த உரி-மையை எடுத்துக்கொண்டு எங்களிடத்-திலே வாதிட்ட, வாதிடுகின்ற பல நண்-பர்களை நான் மிகமிக நன்றாக அறி-வேன்.

இங்கே இந்த விழாவில் நம்மு-டைய நண்பர் சிவபுண்ணியம் அவர்-கள் பேசும்பொழுது, தன்னுடைய வட்-டாரத்தில், தொகுதியில் என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும் என்பதை எடுத்து வலியுறுத்தினார். அதுமாத்திர-மல்ல; சிவபுண்ணியம் இந்த விழா-விலே கலந்துகொண்டதே பாராட்-டத்தக்க, வரவேற்கத்தக்க ஓர் அம்சமாகும். (கைதட்டல்) ஏனென்றால், தீண்டினால் திருநீலகண்டம்_- இவர்-களைப் பாராட்டவே கூடாது, பாராட்-டினால் கட்சியிலே மேலிடம் நட-வடிக்கை எடுக்கும் என்று கட்சியிலே ஒரு பிரிவு_- நான் இந்தப் பிரிவுக்-குள்ளே சொல்லவில்லை. இன்னொரு பிரிவில் அப்படிப்பட்ட தீர்மானங்-களைப் போட்டுக்கொண்டு, அவர்களை கட்சியை விட்டு விலக்குகின்ற நிலை இருக்கும்பொழுது - அப்படி விலக்கப்-பட்ட நிலை இருந்தாலும்கூட *நல்ல-தைச் சொல்ல நான் எங்கும் செல்-லுவேன். எங்கும் குரல் கொடுப்பேன் என்கின்ற (கைதட்டல்) அந்த தைரியத்-திலே உள்ளவர் நம்முடைய சிவபுண்-ணியம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.

திருவாரூரின் வளர்ச்சி

உடனே, ஏதோ கருணாநிதி சூழ்ச்சி செய்து சிவபுண்ணியத்தை மாட்டி-விடுகிறார் என்று அவரும் கருதமாட்-டார். என்னுடைய நல்ல உள்ளம் அவருக்குத் தெரியும். அவருடைய தூய உள்ளம் எனக்கும் புரியும். எனவே அத்தகைய கலவரத்திலே நான் இறங்க விரும்பவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு பொதுவான மக்கள் நலம், அதிலே கட்சி கிடையாது. ஒரு வாய்க்-காலை வெட்ட வேண்டும், ஓர் ஆற்-றுக்கு அணை கட்டவேண்டும், ஆற்-றின் குறுக்கே ஒரு பாலம் கட்டவேண்-டும் என்றால் அதிலே அரசியல் கிடை-யாது. எல்லோரும் சேர்ந்து, அந்த ஊர் மக்களெல்லாம் சேர்ந்து அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, செய்யவேண்டிய பொதுக்-காரியம்_- அப்படிப்பட்ட பொதுக்காரியங்-களை ஓர் அரசு செய்யும்போது அதிலே கலந்துகொள்வதுதான் அரசியல் கட்சி எதுவானாலும்_- தங்களுடைய கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்படுவது_ - அப்படி இணைந்து செயல்-பட்டால் இன்னும் பல காரியங்களை நாம் தமிழகத்திலே செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரையில் நான் யாரிடத்திலும் அதற்காக மனம் வருத்தப்படுபவன் அல்லன். என்னைக் குறை கூறினால்கூட, என்னைச் சுட்டிக்காட்டி, இந்தத் தவறு செய்கிறாய் என்று குற்றம் சாற்றினால்கூட, அது உண்-மையா என்பதை ஆராய்ந்து பார்த்து, தவறு என்றால் திருத்திக் கொள்கின்றவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை அறியாத-வர்-கள் அல்லர், எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையிலே நடைபெறு-கின்ற இந்த அரசு, மக்கள் நன்மைகளை மாத்திரம் மனதிலே பதியவைத்துக்கொண்டு ஆற்றுகின்ற பணிகளில் ஒன்றுதான்_ இன்றைக்கு ஆற்றியிருக்கின்ற இந்தப் பணி, இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்தத் திறப்பு விழாக்கள். நான் இங்கே வந்து அமர்ந்ததும், என்னுடைய நண்பன் தென்னனைப் பார்த்து, என்னப்பா, திருவா-ரூரே மாறிப்போய்விட்டதே! என்று வியப்-புடன் சொன்னேன். காரணம், இந்த விள-மல் கிராமத்துப் பகுதியை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். இவ்வளவு பரவ-சமடைந்திருக்கின்ற அளவுக்கு விளமல் கிராமம் என்றைக்கும் காட்சியளித்ததில்லை. இன்றைக்கு விளமல்_- நாம் விளம்ப முடியாத அளவுக்கு அவ்வளவு அழகாக, அவ்வளவு ரம்மியமாக_ இத்தனை கட்டடங்களா? நான் திருவாரூரிலே ஒரு கிராமத்தைத்தான் பார்க்கிறேனா? இல்லை, தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கிராமத்தைத்-தான் பார்க்கிறேனா? அல்லது இங்கிலாந்து நாட்டிலே லண்டன் நகரத்துக்குப் பக்கத்-திலே உள்ள ஒரு கிராமத்தைப் பார்க்கி-றேனா? என்று அய்யப்படுகின்ற அள-வுக்கு_சந்தேகப்படுகின்ற அளவுக்கு, இப்படி திரும்பி ஒருமுறை கண்ணைச் சுழற்றி-னால் கட்டடங்களாக_- வரிசையாகத் தென்-படுகின்ற அந்தக் காட்சியை நாம் காணுகின்றோம். இந்தக் காட்சி எனக்கு எந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறதென்றால், இது திருவாரூரோடு நிற்காமல், தஞ்-சாவூ-ரோடு நிற்காமல், குடந்தையோடு நிற்காமல், மன்னார்குடியோடு நிற்காமல், எல்லா ஊரி-லும் இத்தகைய கட்டடங்கள், இத்த-கைய வளர்ச்சிகள் தமிழகத்திலே வர வேண்-டும், அந்தக் காட்சியைக் காண வேண்டும். நான் இருந்து காணா விட்டாலும், தமிழகத்திலே_ திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், திரா-விட இயக்கத்தின் குறிக்கோளை தங்களு-டைய உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்-டிருப்பவர்கள் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்-கூடிய நல்ல உள்ளம் படைத்தவர்கள்தான் என் எதிரிலே அமர்ந்திருக்கின்றீர்கள் என்-பதை நான் மன மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே உங்களோடு கலந்துகொள்கின்ற வாய்ப்புப் பெற்றமைக்-காக நன்றியைத் தெரிவித்து விடைபெறு-கின்றேன். _இவ்வாறு முதல்வர் கலைஞர் உரையாற்றினார்.

No comments:

Post a Comment