கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 29, 2010

கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசும் போது,

’’தமிழ்நாட்டில் முதன்முதலாக 5 நாட்கள் நடந்த உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு இதுதான். இந்த மாநாடு எந்தவிதமான அரசியல் சார்பும் இல்லாமல் நடந்தது.

அதை சிறப்பாக நடத்திக் காட்டிய முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுகள். எங்கள் கட்சி சார்பில் 60 ஆண்டுகளாக மத நல்லிணக்க விருதுகள் வழங்கி வருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4-ந் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று 3 பேருக்கு வழங்கி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த 3 பேருக்கும் வழங்கும் விருதை, நமது முதல்வர் கருணாநிதிக்கே வழங்க உள்ளோம்.

அதாவது முதல்வருக்கு நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற விருது வழங்கி பாராட்ட உள்ளோம்’’என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment