கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 9, 2010

தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் : கருணாநிதி கடும் கண்டனம்


சென்னை, ஜூலை 9:இலங்கை
கடற்படை நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்றுமுன்தினம் பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள வெல்லப்பள்ளம் கிராமம் மீனவர் காலனியை சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் இரவு 10 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்து மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும், அந்த தாக்குதலில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது. தமிழக மீனவர்களின் இந்த துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்ரவதைக்கும் கொலைக்கும் ஆளாகும்போது, மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மை சமாதானப்படுத்துகிற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கு விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
இந்திய & இலங்கை அரசுகளுக்கு இடையே அண்மையில் பேச்சு நடைபெற்று, ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால்கூட அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட கூடாது என் றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையை களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விபரமும் தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையி
ல் முதல்வர் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி சிங்கள கடற்படைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்,

’’தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இது போன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக்கடிதத்தின் நகலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, ஏ.கே. அந்தோணி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.



தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’7.7.2010 அன்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம்,

வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த செய்தியினை அறிந்த முதலமைச்சர் அவர்கள் செல்லப்பன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு,


முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாயினை வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார். இந்த நிதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக செல்லப்பன் குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து திமுக மீனவர் அணி இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

மீனவர் அணியின் செயலாளர், சிங்கள அரசின் இந்த செயலுகு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.





No comments:

Post a Comment