கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 28, 2010

வாய்தா ராணி ஜெயலலிதா: ஸ்டாலின்



தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,

எனக்கு முன்னால் பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு செய்தியை குறிப்பிட்டுச் சொன்னார்கள். இன்று மாலை பத்திரிகைகளில் வந்திருக்கக் கூடிய ஒரு அறிக்கையை சுட்டிக்காட்டி, அதற்கு அவருக்கே உரிய பானியிலே பதில் வழங்கியிருக்கிறார்.

நான் ஒன்றை குறிப்பிட விரும்பிகிறேன். தலைமைக் கழகத்தின் அனுமதியை பெற்று, இளைஞரணி சார்பில் வரும் 4ஆம் தேதி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை, மாவட்ட தலைநகரங்களில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான முறையான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.


அந்த அறிவிப்பை பார்த்ததும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார், அதை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையிலே, அந்த அறிக்கையை பார்த்து ஆத்திரம் அடைந்து, சில செய்திகளையெல்லாம் அவர் தனது அறிக்கையிலே வெளியிட்டு காட்டியிருக்கிறார். அதற்கு பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.


நான் அறிவித்திருக்கும் போராட்டம் எதற்காக, நீதிமன்றத்தை ஏமாற்றக் கூடிய, நீதிமன்றத்தில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களை, இனிமேல் எதிர்க்கட்சி தலைவர் அம்மையார் ஜெயலலிதா என்று சொல்வதைவிட, வாய்தா ராணி ஜெயலலிதா என்று எல்லோரும் குறிப்பிட வேண்டும். இதற்காகத்தான் அந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏதோ நீதிமன்றத்தை அவமதிப்பதாக, இளைஞரணியின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கை இருக்கின்றது என்று ஜெயலலிதா குறிப்பிடுகிறார். என்ன அவமரியாதையை அவர் கண்டிருக்கிறார்.


நீதிமன்ற வழக்கிலே எதையாவது சுட்டிக்காட்டிருக்கிறோமா? கிடையாது. நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை விரைவாக நடத்திட வேண்டும். ஜெயலலிதா மீது உள்ள வழக்கு என்ன. சொத்து குவிப்பு வழக்கு. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சேர்த்திருக்கக் கூடிய சொத்து. வருமான வரித்துறையில் அவர் காட்டியுள்ள கணக்கு. அதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான், திமுக பொதுச்செயலாளர் சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தார். 1997ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா மீது இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


இந்த வழக்கில் இருந்த தன்னை காப்பாற்றிக் கொள்ள, தேவையற்ற நிலையில் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார். இது நியாயமா? பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.


ஜெயலலிதாவுக்கு உண்மையில் திராணியிருந்தால், வழக்கை சந்தக்க வேண்டுமே தவிர, ஏதோ வாய்தா வாங்கிக்கொண்டிருப்பது, அதை தட்டிக் கேட்டால், நீதிமன்றத்தை அவமதிப்பதாக அறிக்கை விடக் கூடாது என்று பேசினார்

No comments:

Post a Comment