கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 30, 2010

சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : இள.புகழேந்தி வேண்டுகோள்


தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 4ஆம் நாள் புதன்கிழமை இளைஞர் அணி சார்பில் வாய்தா ராணியும் முதல்தர கிரிமினலுமான ஜெயலலிதா, மக்களை அவமதித்தும், நீதிமன்றங்களின் மீதான மரியாதையைக் குலைக்கும் வண்ணம் தினமும் அறிக்கைகளின் வாயிலாக பித்தலாட்ட அரசியல் செய்யும் பொய்மை வேடத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திடவுள்ளதை மாண்புமிகு துணை முதல்வர், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக கணக்கு வழக்கின்றி வருமான வரித்துறையை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத்தில் தங்களை முழு விசாரணைக்குட்படுத்தி நிரபராதியாக விடுதலையானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா அரசு போட்ட வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்வுடன் பொய்யாக புனையப்பட்டவை என்று நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டு கழகத்தவர்கள் விடுதலையாகி உள்ளனர்.

ஆனால் ஒரு ரூபாய் மாதச் சம்பளம் பெற்று 1991 முதல் 1996 வரை அய்ந்தாண்டில் ரூபாய் 66 கோடியே 65 லட்சத்திற்கு சொத்து ஜெயலலிதாவிற்கு வந்தது எப்படி? என்று சாதாரண கடைகோடி தமிழனும் கேட்ட கேள்விதான் தற்பொழுது பெங்களூருவில் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவால் இழுத்தடிக்கப்பட்டு வருகிற வழக்காகும். தன்னிடம் தவறு இல்லையென்றால் நீதிமன்றத்தில் தைரியமாக வழக்காடி தான் குற்றமற்றவர் என ஜெயலலிதா நிரூபித்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருந்தும் வழக்கை இழுத்தடிப்பது ஏன்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக துணைமுதல்வர் ஸ்டாலின் கேட்பது. தொடர்ந்து சாக்கு போக்கு சொல்லி வழக்கை தள்ளிப்போட்டு வாய்தா வாங்கிடும் ஒரே நபர் இந்தியாவிலேயே ஜெயலலிதாதான். தளபதி அறிவித்திருப்பது கவன ஈர்ப்பு போராட்டம். நீதிமன்ற கவனத்தை ஈர்ப்பது அறிவு நாணயம் உள்ளோர் செயல். தண்டனை வந்துவிடுமோ என்று பயந்து நூறு தடவைகளுக்கு மேல் வாய்தா வாங்குவதுதான் மானங்கெட்ட செயல்.

தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகராக திகழும் துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. மாணவர் அணியினர் ஆங்காங்கு போராட்டம் நடைபெறவுள்ள மாவட்டத் தலைநகரங்களில் இளைஞர் அணி நிருவாகிகளுடன் கலந்துபேசி பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று இள.புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment