கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 29, 2010

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை: கலைஞர்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிவடைந்தையொட்டி கோவையில்செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். அப்போது மாநாடு சிறப்பாக நடத்த உதவியவர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொண்டர்வர்களுக்கும் முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதி,

செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தமிழக ஆளுநர் பர்னாலா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள், கலைஞர்கள், பொதுமக்கள், மாநாட்டுக்கு பணியாற்றிய அமைச்சர் அன்பழன், துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, கோவை மாவட்ட ஆட்சியர், மாநாட்டின் பல்வேறு குழுக்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள், கோவை மேயர் ஆகியோருக்கும், தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன், அவ்வை நடராஜன், பொற்கோ, வைரமுத்து மற்றும் வெளிநாட்டு தமிழ் மக்கள் சிவதம்பி போன்வறவர்கள், சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர், காவல்துறையினருக்கு நன்றி. சிறப்பாக பணியாபற்றிய ஒலி ஒளி ஏற்பாடு செய்தவர்கள், மாநாடு நடைபெற ஒத்துழைத்த தமிழ் பொதுமக்களும் நன்றி.

தொடக்க விழாவில் பொதுமக்கள் 2 லட்சம் பேர் கூடினர். அன்று மாலையில் நடைபெற்ற இனியவை நாற்பது என்ற தலைப்பிட்ட கலை இலக்கிய வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில், சாலையில் இருபுறமும் நின்று கண்டுகளித்தோர் 5 லட்சம் பேர்.

24 முதல் 26 வரை 3 நாட்களில் மாநாட்டில் நடந்த கவியரங்கம், பட்டிமன்றங்களில் நாள்தோறும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். பொது கண்காட்சி அரங்கிலும் மணிக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும், தினமும் 13 நேரம் மொத்தமாக, நாள்தோறும் 40 ஆயிரம் பேரும், இதுவரையில் 1,70,000 பேர் வருகை தந்துள்ளார்கள்.

மாநாட்டு சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள கட்டுரையாளர்களுக்கு 3200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளது. 2003 மலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இணைய மாநாட்டில் மொத்தம் 130 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. பொதுகண்காட்சிக்கு வந்த அனைவரும், இணைய மாநாட்டை கண்டு களித்தனர்.

மாநாடு நடந்த 5 நாட்களும் சுமார் 4 லட்சம் பேருக்கு, 30 ரூபாய் சலுகையில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. வெளிநாட்டு, உள்நாட்டு நபர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் 92. 1642 அறைகளில் தங்கியிருந்தனர். 2605 நபர்கள் தங்கியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார்.


கே: இந்த மாநாட்டின் தலையாய சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

ப: தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் தமிழ்மொழியை மேலும் படிப்படியாக வளர்த்து உயர்த்தி கோபுரத்தில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த மாநாட்டின் சாதனையாக கருதுகிறேன்.

கே: பல வெளிநாடுகளில் தமிழர்கள் தங்கள் மொழியையும், நிலத்தையும் மறந்து வாழுகிறார்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களுடன் வாழ்வதற்கு தமிழறிஞர்களையும், தமிழ் நூல்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ப: அப்படி வேண்டும் என்று கோரிக்கை வந்தால் அதற்கான வசதிகள், வாய்ப்புகள் தேவைப்பட்டால் அவற்றை உருவாக்கி அந்த நாடுகளுக்கு தமிழறிஞர்களை தமிழ் பணியாற்ற அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

கே: தமிழில் படித்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற கூறியிருக்கிறீர்கள். இதனை அரசியல் சட்டம் ஏற்குமா? ஒவ்வொரு மாநிலத்திலும் இது போல கூறினால் ஒருமைப்பாடு என்னவாகும்?

ப: இந்த கருத்தை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டதை மாநாட்டில் பார்த்தீர்கள். இதனை நானாக சொல்லவில்லை. தமிழ் நாட்டில் இத்தகைய கருத்துள்ள பல ஏடுகள், இதழாசிரியர்கள், புலவர் பெருமக்கள் தெரிவித்த கருத்துக்களின் எதிரொலியாகத்தான் மாநாட்டில் இதனை அறிவித்தோம்.எனவே இதனை தமிழ் மீதும், தமிழர் மீதும் அவர்களுடைய முன்னேற்றத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள். எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

கே: சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வருமா?

ப: இப்போதுதான் இவ்வளவு பெரிய தமிழ் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். அதற்குள் சட்டமன்ற தேர்தலுக்கு என்ன முக்கியம்.

கே: கோவையில் செம்மொழி மாநாட்டு பூங்கா எவ்வளவு காலத்தில் அமையும்?

ப: பூங்காவின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

கே: செம்மொழி மாநாட்டுக்காக கைதிகளை விடுவிப்பதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?

ப: செம்மொழி மாநாட்டிற்காக கைதிகளை விடுவிக்கப் போவதாக அரசு சார்பில் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டதாக எந்த ஏடுகளுக்கும் அரசு சார்பில் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எதை நம்பி, யாரை நம்பி இப்படி அறிக்கை விடுத்தார் என்று தெரியவில்லை.விஷயமறிந்த ஏடுகள் கூட அவரது அறிக்கையை எப்படி வெளியிட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அந்த அறிக்கையில் கைதிகளை விடுவிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

ஆனால் அவரே தான் முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு 1992ம் ஆண்டு 230 கைதிகளையும், 1993 ஆம் ஆண்டு 132 கைதிகளையும், 1994 ஆம் ஆண்டு 163 கைதிகளையும் விடுதலை செய்திருக்கிறார்.ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டை விட தனது பிறந்தநாள் புனிதமானது என்று அவர் கருதி கைதிகளை விடுவித்திருக்கலாம். எனக்குள்ள வேதனையெல்லாம் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் இதையெல்லாம் நினைவுப்படுத்தினால் தவறுகள் மீண்டும் மீண்டும் வராது.

கே: மத்திய ஆட்சிமொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்றுகூறியிருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இதனை வலியுறுத்துவார்களா?

ப: உங்கள் கருத்து ஏற்கப்படும்.

கே: கொடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி தொழிற்சாலை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ப: நீங்கள் சொன்ன புதிரான செய்தி விசாரிக்கப்படும். அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்கும்.

கே: செம்மொழி மாநாட்டுக்கு பிறகு நீங்கள் ஓய்வு பெற போவதாக அறிவித்தீர்களே?

ப: அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை.

கே: அரசியலிலிருந்து சற்றே விலகி இருக்கப் போவதாக கூறினீர்களே?

ப: நீங்கள் சொல்லுங்கள். நான் விலகியிருக்கட்டுமா?

கே: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது?

ப: இப்போதுதானே முதன் முதலில் செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறோம்.

கே: செம்மொழி மாநாட்டில் உங்களை நெகிழ வைத்த நிகழ்வு எது?


ப: எல்லா நிகழ்ச்சிகளுமே என்னை நெகிழ வைத்தன.

கே: அடுத்த செம்மொழி மாநாடு எப்போது நடத்தப்படும்?


ப: தமிழ்நாட்டில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பிற நாடுகளிலும் மாநாட்டை கூட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மாநாட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்ப் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டுள்ளது.

கே: இலவச நிலம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?

ப: இரண்டு ஏக்கர் இலவசம் என்று கூறியிருந்தோம். அதனை பிரித்துக் கொடுக்கும் போது சில இடங்களில் ஒன்றரை, ஒன்றேமுக்கால் ஏக்கர் என ஆங்காங்கே உள்ள நிலங்களுக்கு ஏற்ப அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்திலும் இரண்டு ஏக்கர் நிலத்திற்குரிய பயன் விளையலாம்.ஆகவே ஆங்காங்குள்ள நிலப்பரப்புக்கு ஏற்பவும், பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டன.

கே: உயர் கல்வியில் தமிழ் என்று அறிவிப்பு வெளியிடப்படுமா?

ப: இந்தாண்டு முதல் பொறியியல் கல்வி தமிழில் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே அமைச்சர் அறிவித்துள்ளார். இனி அடுத்தது மருத்துவ கல்விதான்.

கே: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு திமுகவும் காரணம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

ப: தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் காரணமாக அவர்கள் உத்தேசித்திருந்த அளவை விட தற்போது ஓரளவு விலை உயர்வை குறைத்து அறிவித்திருக்கிறார்கள். நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இந்த விலை உயர்வால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.150 கோடி நிதிச்சுமை ஏற்படும். என்றாலும் பொது மக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கேள்வி: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என கூறியிருக்கிறீர்களே?

பதில்: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன் என நான் கூறியதற்கு ஓய்வு பெற போவதாக அர்த்தம் இல்லை. நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் செய்தியாளர்கள்) கூறினால் ஓய்வு எடுக்க தயாராக உள்ளேன்.

கேள்வி: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?

பதில்: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருப்பதாலேயே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலை உயர்வில் இருந்து தற்போது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது; இந்த விலைவாசி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.

கேள்வி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கக் கூடாது என்று ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் கூறியிருந்தார்களே?

பதில்: அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான்அதனை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் இங்குள்ள தமிழர்களையும், வெளிநாட்டு தமிழர்களையும் மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.

அதற்காக குடியரசு தலைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பேசியதை தாங்கள் அறிவீர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தார்.



No comments:

Post a Comment