கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 29, 2010

செம்மொழித் தகுதி பெற்ற ஒரு மொழிக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது இதுதான் முதல்முறை மத்திய அமைச்சர் ஆ.இராசா பேச்சு


உலகத் தமிழ்ச் செம்-மொழி மாநாடு நினை-வாக சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய அமைச்சர்ஆ.இராசா வெளியிட முதலமைச்சர் கலைஞர் பெற்றுக்கொண்-டார். உலகத் தமிழ் செம்-மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளி-யிட்டு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது,

வரலாற்று சிறப்பு மிக்க இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பு அஞ்சல்தலை-களை வெளியிடும் வாய்ப்பு கிடைக்க பெற்றமைக்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன். அஞ்சல்தலையை வெளியிட்டு முதலமைச்-சரை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த விழா அல்ல. அந்த பாராட்டுகளை முதல-மைச்சரும் விரும்பக்கூடிய-வர் அல்ல.

இந்தியாவில் அஞ்சல் துறை சார்பில் பல அஞ்சல்தலைகள் வெளி-யிடப்பட்டிருந்தாலும், செம்மொழி விழாவிற்காக எந்த அஞ்சல் தலையும் இந்திய அஞ்சல் துறை சார்பில் இதுவரை வெளி-யிடப்படவில்லை. முதன் முதலாக தமிழ்மொழி அந்த தகுதியை பெற்றுள்-ளது. தமிழுக்கு செம்-மொழி தகுதி அளித்தற்-காக இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்-கிறது. இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது ஏன் என்பது பற்றி இங்கு விளக்க கடமைபட்டுள்-ளேன். தலைவர் கலைஞர் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட மத்திய அமைச்சர் என்ற கடமை-யினால் அந்தக் காரணங்-களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அமெரிக்காவில் கறுப்-பர் இன விடுதலைக்காக போராடி தனது 35 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்ற கறுப்பு மனிதர் மார்ட்டின் லூதர்கிங். அதே கறுப்பர் இனத்தில் பிறந்த ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு பேசிய பேச்சு பிரகடன-மாக இருந்தது. இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். முஸ்-லிம்கள் இருக்கிறார்கள். யூதர்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் இருக்கிறார்-கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கி-றார்கள். இவர்கள் எல்-லோரும் சேர்ந்து ஒரு தேசத்தை கட்டமைத்து இருக்கிறோம். அந்த தேசத்துக்கான பண்பாடுகளை உலகின் மூலை முடுக்குகளில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்ற வர-லாற்று சிறப்பு மிக்க பிரகடனத்தை ஒபாமா தெரிவித்தார். இதன் மூலம் ஒரு பெரிய புரட்சியை அமெரிக்கா செய்து விட்டதாக சொல்-கிறது. ஆனால் அதை-விட பெரிய புரட்சியை இந்த மாநாடு பறைசாற்-றுகிறது. அது எது என்றால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கலைஞர் கொடுத்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க வரியினால். உலகின் தலை-யாய மொழியாக தமிழ் விளங்குகிறது.

இந்தியாவில் இரு கலாசாரங்கள் உள்ளன. அந்த இரண்டு கலாசாரங்-களுக்கும் இடையில் உரசல் இல்லை, ஊடல் இல்லை. சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு செம்மொழிகளும் இந்தி-யா-வின் தூண்கள் ஆகும். சமஸ்கிருதம் செம்மொழி தகுதி பெற்றது. பல மொழிகள் இருப்பினும் தலையாய மொழியாக தமிழ் விளங்கி வருகின்-றது. இந்த மாநாட்டின் மய்ய கருத்தான பிறப்-பொக்கும் எல்லா உயிர்க்-கும் என்ற தத்துவத்தை கொடுத்த பெருமை திரா-விட இயக்கத்திற்கு உள்-ளது. அதை உலகம் முழு-வதும் இந்த மாநாட்டின் மூலம் கொண்டு சென்ற பெருமை தலைவர் கலை-ஞருக்கு உண்டு. தாழ்த்தப்-பட்ட சமுதாயத்தை புறக்-கணித்து வந்த இந்த நாட்டில் அதே தாழ்த்தப்-பட்ட இனத்தை சேர்ந்த என்னால் அஞ்சல்தலை வெளியிடப்படுவதற்கு கார-ணமாக இருந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்-கொள்-கிறேன்.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசினார்.

No comments:

Post a Comment